Wednesday, April 10, 2013

தனியார் வசம் உள்ள நூறு ஏக்கர் ந�லத்தை மீட்டு பந்தலூரில் அரசு அலுவலகங்கள் அமைக்க கோரிக்கை


தனியார் வசம் உள்ள நூறு ஏக்கர் ந�லத்தை மீட்டு பந்தலூரில் அரசு அலுவலகங்கள் அமைக்க கோரிக்கை
பந்தலூர், ஏப்.3:
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவ.சுப்பிரமணியம், மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை வருவாய்துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
பந்தலூர் நகரில் வாடகை கட்டடத்தில் சில அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல அலுவலகங்கள் இடவசதியை காரணம் காட்டி பந்தலூரில் அமைக்கப்படவில்லை. அரசுக்கு சொந்தமான நூறு ஏக்கர் நிலம், தனியார் வசம் உள் ளது. அதனை மீட்டு அரசு அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண் டும்.
பந்தலூர் தாலுகாவாக பிரிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 3 ஆண�டுக்கு முன்பு தான் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. பந்தலூரில் அரசு கருவூலம், அரசு நுகர்வோர் பொருள் வாணிப கழக குடோன், நூலகம், சந்தை, பொழுதுபோக்கு பூங்கா, பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளிட்டவை அமைக்க போதிய இடவசதியில்லை என்று காரணம் கூறப்பட்டு அவை அமைக்கப்படவில்லை.தற்போது இயங்கி வரும் நுகர்வோர் பொருள் கழக குடோன், விளையாட்டு மைதானம், கிளை நூலகம் ஆகியவை போதிய இடவசதி இல்லாமலும், மிகவும் பழுதடைந்து, உரிய பராமரிப்பு இன்றி உள்ளது. பந்தலூரில் பல்வேறு அரசு துறை அலுவலக கட்டடம் அமைக்க உரிய நடவடிக்கை வேண�டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment