Friday, November 28, 2014

நவம்பர் 30-ம் தேதி ஞாயிற்று கிழமை மதியம் 1.30 மணிக்கு

ன்பு நண்பர்களே நலமா? வளமான வாழ்த்துக்கள்.

நான் பங்கேற்ற   கலைஞர் தொலைகாட்சி நெஞ்சு  பொறுக்குதில்லையே  உணவு கலப்படம் 
நிகழ்ச்சி எதிர்வரும்   நவம்பர் 30-ம் தேதி ஞாயிற்று கிழமை மதியம் 1.30 மணிக்கு
ஒளிபரப்பாகிறது   நிகழ்ச்சியை பார்த்து அதற்க்கான  நிறை குறைகளை எனக்கு தெரிவியுங்கள் 
நன்றி 
Dear friends  How are you?  30.Nov 2014 Sunday
1.30-PM telecast I attend  Kalainger TV Nenju porukkuthillaiye prrogramme

Kind watch


S.SIVASUBRAMANIAM, President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND  ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.   E.MAIL: cchepnlg@gmail.com    cchep.siva@gmail.com  
94 88 520 800 - 94 898 60 250  -  944 29 740 75  - 948 639 34 06   Web:  www.cchepnlg.blogspot.in   www.cchepeye.blogspot.in   Facebook:   http://facebook.com/cchepnilgiris

Monday, November 24, 2014

இயற்கை பாதுகாப்பு தினம்

அத்திக்குன்னா அரசு உயர் நிலை பள்ளியில்
இயற்கை பாதுகாப்பு தினம் கடைபிடிக்க பட்டது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், தேசிய பசுமை படை ஆகியன சார்பில் அத்திக்குன்னா அரசு உயர்நிலை பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கபட்டது.  பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதர சுந்தரம்  தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் இயற்கை பாதுகாப்பின் அவசியங்கள் குறித்து பேசும்போது நமக்கு உணவு, உடை, நீர், காற்று என அனைத்தும் இயற்கையே தருகிறது.  நமது செயல்களால் இயற்கை பதிப்புகள் அதிகரிக்கிறது.  இயற்கையில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள் நமக்கே பாதிப்பாக அமைகிறது.  நமது தேவைகளை குறைத்து கொண்டு இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்வதால் இயற்கை அழிவை தடுக்க முடியும்.  இயற்கைக்கு பாதிப்பு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது.   நமது சந்ததியினர் நலமாக வாழ நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துகொன்டனர்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி ஆசிரியர் பிரதீப் வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் ரகுபதி நன்றி கூறினார்.

Sunday, November 23, 2014

 மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகோ செலின் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சிவராஜ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ஆல்தொரை பேசும்போது தற்போது மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகின்றது. மின் உற்பத்தி மேற்க்கொள்ள கூடுதல் செலவுகள் மற்றும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.   தமிழகத்தினை விட மற்ற மாநிலங்கள் குறிப்பாக அரியானா மேற்குவங்காளம் மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின்சார தட்டுபாடு அதிகமாக உள்ளது. மின்தட்டுபாடுகளை போக்க மின்சாரத்தினை சிக்கனமாக செலவிடுவது அவசியமாகிறது. குண்டுபல்புகளை மாற்றி சி.எப்.எல் அல்லது எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துவது. மின் சாதன பொருட்களை சுவர்களின் ஓரத்தில் வைக்காமல் இடைவெளி விட்டு வைப்பது தேவையற்ற நேரங்களில் மின்சார உபயோக பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது பல்புகள் நமக்கு தேவைக்கேற்ப தாழ்வாக அமைத்துக்கொள்ளல் போன்றவை மின்சாரத்தினை சிக்கனப்படுத்த எளிய வழிகள் ஆகும். மின்சார சிக்கனத்தின் மூலம் மாதந்திர மின்செலவும் குறையும். அரசும் தற்போது 500 யூனிட் வரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே மானியம் வழங்குகிறது. தற்போது 35க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களில்  சோலார் மூலம் மின்உற்பத்தி செய்து பயன்படுத்த மாநில அரசு முடிவு செய்து நடைமுறைபடுத்தி வருகின்றது.  மேலும் பல்வேறு அரசு நிறுவனங்களிலும் சோலார் மின்சக்தி பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வீடுகளில் சோலார் மூலம் மின்தேவைகளை அமைத்துகொண்டால ரீதொழிற்சாலைகளுக்கு மின்சாரம் பயன்படுத்த முடியும். தற்போதைய சூழலில் வினாக பயன்படுத்தும் மின்சாரத்தினை சேமித்தாலே மின்தட்டுபாட்டினை பெருமளவு குறைக்க முடியும். அனைவரும் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருஙங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார். முடிவில் மாணவி      நன்றி கூறினார்.

Saturday, November 22, 2014

நவம்பர் 30-ம் தேதி கலைஞர் தொலைகாட்சி நெஞ்சு பொறுக்குதில்லையே பாருங்கள்

அன்பு நண்பர்களே நலமா? வளமான வாழ்த்துக்கள்.

நான் பங்கேற்ற 
கலைஞர் தொலைகாட்சி நெஞ்சு பொறுக்குதில்லையே
உணவு கலப்படம் 
நிகழ்ச்சி எதிர்வரும் 
நவம்பர் 30-ம் தேதி 
ஞாயிற்று கிழமை 
மதியம் 1.30 மணிக்கு
ஒளிபரப்பாகிறது 
நிகழ்ச்சியை பார்த்து அதற்க்கான 
நிறை குறைகளை எனக்கு தெரிவியுங்கள் 
நன்றி 
Dear friends
How are you?
30.nov 2014
Sunday

1.30-PM telecast I attend 
Kalainger TV
Nenju porukku thillaiye prrogramme

Kind watch


S.SIVASUBRAMANIAM, President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
94 88 520 800 - 94 898 60 250  -  944 29 740 75  - 948 639 34 06