Monday, July 18, 2011

NELLAKKOTTAI EYE CAMP














Tuesday, April 12, 2011


    
FZ­uûU GlúTôÕ ?
Sôh¥u Øu]ôs Ï¥VWÑj RûXYo
PôdPo. H.©.ú_. AlÕpLXôm AYoL°u
FZ­uûU GlúTôÕ ? Gu¡u\ £kRû].

Ø  JÚ SôÓ FZXt\RôL CÚdL úYiÓùU²p,
   ARu Uô¨XeLs FZXt\RôL CÚdL úYiÓm ;
Ø  JÚ Uô¨Xm FZXt\RôL CÚdL úYiÓùU²p,
ARu UôYhPeLs FZXt\RôL CÚdL úYQÓm ;
Ø  JÚ UôYhPm FZXt\RôL CÚdL úYiÓùU²p,
ARu FWôh£Ls FZXt\RôL CÚdL úYiÓm ;
Ø  JÚ FWôh£ FZXt\RôL CÚdL úYiÓùU²p,
ARu UdLs FZXt\YoL[ôL CÚdL úYiÓm ;
Ø  AYoLs ReLs ÏZkûRl TÚYj§­ÚkúR E¬V,
U§l©­ÚkRôp Rôu Ftßd ¡ûPdÏm GuTûRj ;
Ø   ReLs U]§p T§V ûYj§ÚdL úYiÓm.

Su±  : úR£V SX ®¯l×QoÜ CVdLm DúWôÓ

Au×Pu UdLs SX²p
 


áPío ÖLoúYôo U²RY[ ÑtßfãZp TôÕLôl× ûUVm - UdLs ûUVm TkRío
www: cchepeye.blogspot.com,  email: cchep.siva@gmail.com
 



ULôjUô Lôk§ ùTôÕ úNûY ûUVm - TkRío
www: pdrganthi.blogspot.com,  E-mail: pdrganthi@gmail.com

Thursday, April 7, 2011

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்



மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்



மனிதக் குடுப்பதினைச் சேர்ந்த சகலரிவதும் உள்ளார்ந்த கௌரவத்தையும், அவர்கள் யாவரதும் சமமான, பராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளதாலும்,
மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றை அவமதித்தலும், மனுக்குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளித்துள்ளதாலும், பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், அச்சத்திலிருந்தம், வருமையிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை மனிதன் பூரணமாக துயக்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்கின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுள்ளதாலும்,
கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதி வழியாக எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்க, ேவண்டுமேல் சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமைகள் பாதுகாப்பப்படுவது அத்தியாவசமாகவுள்ளதாலும், நாடுகளிடையே நட்புறவுகள் ஏற்படுத்தப்படுவதனை மேம்படுத்துவது அத்தியாவசியமாகவுள்ளதாலும்,
ஐக்கிய நாடுகள் சபையிற் கூடிய சகல மக்களும், பட்டயத்தில், அடிப்படை மனித உரிமைமகள் பற்றிய நமது நம்பிக்கையை ஒவ்வொரு மனிதப் பிறவினதும், கௌரவம், பெறுமதியை, ஆண் பெண்ணின் சம உரிமையை மீளவலியுறுத்தி அதிசுதந்திரச் சூழலில், சமூக முன்னேற்றம், உயர்ந்த வாழ்க்கைத் தரமாதியவற்றை மேம்படுத்தத் துணிந்துள்ளாராதலாலும்,
மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உலக மதிப்பையும், அனுட்டானத்தையும் மேம்படுத்தலை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டுறவுடன் முற்று முழுதாகச் ெசயல் படுத்த அங்கத்துவ நாடுகள் சூளுறுதி கொண்டுள்ளனவாதலாலும்,
இச்சூளுறுதியைப் பரிபூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு, இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் பற்றிய ெபாது விளக்கமிருத்தல் முக்கியமுடையதாதலாலும், இப்பொழுது:
பொதுச் சபை பிரகடனப்படுத்துவதாவது
சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு சாதனமும், இப்பட்டயத்தை இடையறாது மனத்திலிருத்தி, இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான மதி்ப்பினை மேம்படுத்துதற்குக் கற்பித்தல் மூலமும், கல்வி மூலமும், தேசிய, சர்வதேசிய நிலைப்பட்ட நடவடிக்கைகள் மூலமும் முயலும் நோக்கிற்காகவும், அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும், தத்தம் மக்களிடையேயும், அத்துடன் தங்கள் நியாயாதி்க்கத்தின் கீழ் வரும் ஆள்புலத்து மக்களிடையேயும், இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் முழு மொத்தமாக, வலிவும் பயனுறிதிப்பாடுமுடைய முறையில் ஏற்கப்பட்டு அனுட்டிக்கப்படுவதை நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படத்தக்க, சகல மக்களும் நாட்டினங்களும் தத்தமது சாதனையிலக்கின் பொது அளவாகக் கொள்ளத்தக்க இந்த மனித உரிமை உலகப் பொதுப் பிரகடனத்தைப் பொதுச் சபையானது எடுத்துச் சாத்துகின்றது.


உறுப்புரை 1
மனிதப் பிறிவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர் ; அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.


உறுப்புரை 2
இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லத வேறு அபிப்பிராயமடைமை, தேசிய அல்லத சமூகத் தோற்றம், ஆகனம், பிறப்பு அல்லத பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவர்.
மேலும், எவரும் அவருக்குரித்துள்ள நாட் டின் அல்லது ஆள்புலத்தின் அரசியல், நியாயாதிக்க அல்லது நாட் டிடை அந்தஸ்தின் அடிப்படையில் அது தனியாட்சி நாடாக, நம்பிக்கைப் பொறுப்பு நாடாக, தன்னாட்சியற்ற நாடாக அல்லது இறைமை வேறேதேனும் வகையில் மட்டப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினுஞ்சரி - வேறுபாெடதுவும் காட்டப்படலாகாது.


உறுப்புரை 3
வாழ்வதற்கும், சுதந்திரத்தையுடையதாயிருத்த தற்கும் பாதுகாப்பிற்கும் சகலரும் உரிமையுடையோராவர்.


உறுப்புரை 4
எவரும், அடிமையாக வைத்திருக்கபடுதலோ அல்லது அடிமைப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுதலோ ஆகாது ; அடிமை நிலையும் அடிமை வியாபாரமும் அவற்றில் எல்லா வகையிலும் தடை செய்தல் வேண்டம்.


உறுப்புரை 5
எவரும், சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான, மனிதத் தன்மையற்ற அல்லத இழிவான நடைமுறைக்கோ தண்டனைக்கோ மட்டப்படுத்தலாகாது.


உறுப்புரை 6
ஒவ்வொருவரும் எவ்விடத்திலும் சட்டத்தின் முன்னர் ஓர் ஆளாக ஏற்றுக்கொெள்ளப்படுவதற்கு உரிமையுடையவராவர்.


உறுப்புரை 7
எல்லோரும் சட்டதின் முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள். இப்பிரகடனத்தை மீறிப் புரியப்பட்ட பராபட்சம் எதற்கேனும் எதிராகவும் அத்தகைய பராபட்சம் காட்டுவதற்கான தூண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் எல்லோரும் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள்.


உறுப்புரை 8
அவ்வந் நாட்டின் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் ெசயல்களுக்காத் தகுதிவாய்ந்த தேசிய நியாய சபைகளினும் வழங்கப்படும் பயனுறுதியுடைய பரிகாரத்துக்கு உரிமையுடையவர்கள்.


உறுப்புரை 9
ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் கைது ெசய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது.


உறுப்புரை 10
அவர்கள் உரிமைகள், கடப்பாடுகள் பற்றியும் அவர்களுக்கெதிராகவுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான நடுநிலை தவறாத நியாய சபையினால் ெசய்யப்படும் நீதியான பகிரங்கமான விசாரணைக்கு ஒவ்வொருவரும் உரிமையுடையவர்களாவர்.


உறுப்புரை 11
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்படும் எல்லோரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்துக்கிணங்க அவர்கள் குற்றவாளிகளென காண்பிக்கப்படும் வரை, சுற்றவாளிகளென ஊகிப்படுவதற்கு ஊகிக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள். அவ்விளக்கத்தில் அவர்களது எதிரவாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.
2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லா ெசய்யால் புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறென்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.


உறுப்புரை 12
ஒவ்வொருவரும் அவ்வவரது அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு அல்லது கடிதப் போக்குவரத்து என்பவை சம்பந்தமாக, ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் தலையிடப்படுவதற்கோ அல்லத அவரது மரியாதை, நன்மதிப்பு என்பவற்றின் மீதான தாக்குதல்களுக்கோ உட்படுத்தலாகாது. அத்தகைய தலையீட்டுக்கு அல்லது தாக்குதல்களுக்ெகெதிராக ஒவ்வொருவருக்கும் சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுடையவராவர்.


உறுப்புரை 13
1. ஒவ்வொரு நாட் டினதும் எல்லைக்குள் சுதந்திரமாகப் பிரயாணஞ் ெசய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2. தமது சொந்த நாடு உட்பட ஏதேனும் நாட்டை விட்டுச் ெசல்லவும் தத்தமது நாட்டுக்குத் திரும்பவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.


உறுப்புரை 14
1. வேறு நாடுகளுக்குச் ெசல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வாய்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அலல்து ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் ெநறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.


உறுப்புரை 15
1. ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்குமுண்டு.
2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பபிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.


உறுப்புரை 16
1. முழு வயதடைந்த ஆண்களும், ெபண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காராணமாக கட்டுப்பாெடதுவுமின்றி திருமண ெசய்வதற்கும் ஒரு குடு்ம்பத்தை உருவாக்குவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் ெசய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் குலைக்கப்டும் பொழுதும் அவரக்ள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.
3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.


உறுப்புரை 17
1. தனியாகவும் வேெறருவருடன் கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.


உறுப்புரை 18
சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதர் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயில்நெறி, வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேெறருவருடன் கூடியும் , பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.


உறுப்புரை 19
கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலைலீடின்றிக் கருத்துக்களைக் கொண் டிருத்தற்கும், எவ்வழிவகைகள் மூலமும் எல்லைகளைப் பொருட்படுத்தாமலும் தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும் ெபறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.


உறுப்புரை 20
1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.
2. ஒரு கழகத்தினைச் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.


உறுப்புரை 21
1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் ெதரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.
2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது, காலாலகாலம் உண்மையாக நடைெபறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும், சமமானதுமாக வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுெமன்பதுடன், இரகசிய வாக்குமூலம் அல்லது அதற்குச் சமமான, சுதந்திரமான வாக்களிப்பு நடைமுறைகள் நடைெபறுதல் வேண்டும்.


உறுப்புரை 22
சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் ஒவ்வொருவரும் சமூகப் பாதுகாப்புக்கு உரிமையுடையவர். அத்துடன் தேசிய முறய்சி மூலமும் சர்வதேசிய நாட்டிடை ஒத்துழைப்பு மூலமும் ஒவ்வொரு நாட் டினதும் அமைப்பு முறைக்கும் வனங்களுக்கும் இணையவும் ஒவ்வொருவரும் தத்தம் மதிப்புக்கும் தத்தம் ஆளுமைச் சுதந்திர முறையில் அபிவிருத்தி ெசய்வதற்கும் இன்றியமையாதவையாக வேண்டப்பெறும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளைப் ெபருவதற்கும் உரித்தடையவராவர்.


உறுப்புரை 23
1. ஒவ்வொருவரும் தொழில் ெசய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான ெசய்யுந் தொழில் நியாயமானதும் அநுகூலமுடையதுமான தொழில் நிபந்தனைகட்டு உரியோராயிருப்பதற்கான, தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.
2. ஒவ்வொருவரும் வேறுபாெடதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் ெபறுவதற்கு உரித்துடையவராவர்.
3. வேலை ெசய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.
4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.


உறுப்புரை 24
இளைப்பாறுகைக்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரம் உரிமையுடயர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான காலாகால விடுமுறைகள் அடங்கும்.


உறுப்புரை 25
1. ஒவ்வொருவரும் உணவு, உைட, வீட்டு வசதி, மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாைம ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அைவ திருமண உறவிலிட் பிறந்தவையாயினுஞ்சரி அத்தலை உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பபினைத் துய்க்கும் உரிமையுடையன.


உறுப்புரை 26
1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ெதாடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.
2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி ெசய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்கிடையேயும், இன அல்லத மதக் குழுவினருக்கிைடயேயும் மன ஒத்திசைவு, பொறுதியுணர்வு, தோழமை, ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டுமென்பதுடன், சமாதானத்தைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும்.
3. தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண் டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே தெரிந்தெடுக்குமுரிமை ெபற்றோருக்குண்டு.


உறுப்புரை 27
1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தர் என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.


உறுப்புரை 28
இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட் டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.


உறுப்புரை 29
1. எந்த ஒர சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகலிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் ெபற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.


உறுப்புரை 30
இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது ெசயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.





[index]














நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - பகுதி 1 Consumer Protection Act 1986


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்


நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - பகுதி 1

Consumer Protection Act 1986

இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 

                1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:

கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே  இச்சட்டப்படி - மாவட்ட அளவில் " மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்", மாநில அளவில் "மாநில ஆணையம்", தேசிய அளவில் " தேசிய ஆணையம்" அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள்படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.

1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-

1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-

5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-

10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-

வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.

2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.

3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்
.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்




வழக்கு போடலாம் !


சென்னை சென்டிரலில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்  தினந்தோறும் இரவு 10.30 மணிக்கு புறப்படும், நேற்று இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் மாலையில் இருந்தே காத்திருந்தனர்.ரெயில்வே தகவல் பலகையில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் எப்போது எந்த பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் என்ற விபரம் தெரிவிக்க படவில்லை. ஒலிபெருக்கியிலும் ரெயில் வந்து விட்டதாகவோ, எந்த நேரத்தில் புறப்படும் என்பன போன்ற எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் வழக்கமாக ரெயில் புறப்படும் நேரமான 10.30ஐ கடந்தும் இலவு காத்த கிளியாக பயணிகள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
இரவு 11 மணி அளவில் காத்திருந்து பொறுமை இழந்த பயணிகள் ரெயில்வே விசாரணை மையத்திற்கு சென்று ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் எப்போது வரும் என கேட்டனர். அதற்கு ரெயில்வே ஊழியரோ ரெயில் சரியான நேரத்திற்கு 6-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டது என்று பதில் அளித்தனர்.
இதனால் அதிர்ந்து போன பயணிகள் ரெயில்வே விசாரணை மையத்தை முற்றுகையிட்டனர். பயணிகளுக்கு ரெயில் எந்த பிளாட்பாரத்தில் நிற்கிறது, எப்போது புறப்படும் என்பன போன்ற தகவல்களை அறிவிக்காததை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 150க்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை தவற விட்டனர்.
பயணிகளின் போராட்டத்தினால் சென்ட்டிரல் ரெயில் நிலையமே அல்லோல கல்லோலப்பட்டது. ரெயில்வே ஊழியர்களின் கவன குறைவால் பெண்கள், குழந்தைகளோடு, ஊருக்கு செல்ல வந்த குடும்பத்தினர் பெரும் அவதிக்குள்ளாயினர். இவ்வளவு களேபரம் நடந்தும் சென்டிரலில் உள்ள ரெயில்வே போலீசாருக்கோ, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ எந்த தகவலும் தெரியவில்லை. அவர்கள் வழக்கம் போல இரவு பணியில் மூழ்கியிருந்தனர். எதையும் கண்டு கொள்ளவில்லை.
பயணிகளின் போராட்டம் உச்சகட்டம் அடைந்ததை தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரெயிலை தவறவிட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தார். ஈரோடு, வழியாக கோவை செல்லும் ரெயிலில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். சுமார் 3 மணி நேர தவிப்புக்கு பின்னர் ஒரு வழியாக சமாதானம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பயணி பரமசிவம் கூறும்போது:-
ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கிற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. மாலை 6.30 மணியில் இருந்து காத்திருக்கிறோம். தகவல் பலகையிலும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் பற்றிய விவரம் இல்லை. ஒலி பெருக்கி அறிவிப்பிலும் தெரிவிக்கவில்லை. 32 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து புறப்பட்டு வந்தேன். ரெயில்வேயின் கவன குறைவால் ரெயிலை தவறவிட்டு மனைவி குழந்தைகளோடு தவித்துக்கொண்ருக்கிறேன். எங்களது மன உளைச்சலுக்கு ரெயில்வே நிர்வாகம் விலை கொடுக்க முடியமா? சம்பந்தப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அவரை போலவே ஏராளமான பயணிகள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். இதே போல எழும்பூரிலும் அடிக்கடி பிளாட்பாரங்களை மாற்றி மாற்றி ரெயில்கள் நிறுத்தப்படுவதால் படிப்பறிவில்லாத பயணிகள் ரெயிலை தவற விட்டு தவிக்கின்றனர்.

இது போன்ற நிலையில் நுகர்வோர்கள் செய்ய வேண்டியது என்ன? 

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான், பயணிகள் ரயில் செல்ல முன்பதிவு செய்வார்கள். முன்பதிவு செய்யாதவர் களும், ரயில் அட்டவணைப்படி புறப்படும் என்ற நம்பிக்கையில், பயணதிட்டத்தை வகுத்திருப்பார்கள். இச்சம்பவத்தால் பலர் பல கஷ்டங்களுக்கு ஆளாகியிருப் பார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கால விரயம், மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பு இவற்றை ஈடு செய்ய வேண்டிய பொறுப்பு நுகர்வோர் பாதுகாப்பு சட்டப் படி ரயில்வே துறையை சார்ந்ததாகும். இது குறை பாடான சேவை என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். அதற்கான நிவாரணம் கிடைக்கும். இவ்வழக்கை தனித்தனி யாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ, அல்லது அரசிடம் பதிவு செய் துள்ள நுகர்வோர் நல அமைப்போ வழக்கு தொடரலாம்.

உச்ச நீதி மன்ற நீதிபதி தொடர்பான தீர்ப்பு



உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவரே!
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் , 77 வயதான் டால்மியா என்பவர் உச்ச நீதிமன்றத்தின் பொது தகவல் அதிகாரிக்கு தகவல் கேட்டு விண்ணப் பித்தார். அதாவது, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதான தனது புகாரின் மீது, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி எடுத்த நடவடிக்கை என்ன என்பது தான் அவரால் கேட்க்கப்பட்ட விபரம்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இச்சட்டத்தின் கீழ் வருபவர் இல்லை. எனவே தகவல் தர இயலாது என பொது தகவல் அதிகாரி மறுத்து விட்டார். எனவே டால்மியா, உச்ச நீதிமன்ற அப்பீலேட் அத்தாரிட்டிக்கு மேல் முறையீடு செய்தார்.
மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே டால்மியா மத்திய தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் மேல் முறையீடு ஏற்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதியும் இச்சட்டத்தின் கீழ் வருவதால், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சம்பந்தமாக டால்மியா அனுப்பிய புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தை மனு தாரருக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற பொதுதகவல் அதிகாரி அப்பீல் செய்தார். அதை விசாரணை செய்த உயர் நீதி மன்றம் " உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியும் இச்சட்டத்திற்கு உட்பட்டவர் தான். எனவே டால்மியா கேட்டிருக்கும் தகவல்களை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஜனநாயக உண்மையை வலியுறுத்தியுள்ளது.

ஜன நாயக அரசு ஊழலற்று செயல் பட வெளிப்படையான செயல்பாடு வேண்டும். அத்துடன் என்ன நடக்கிறது என்பது பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக பல நிர்பந்தங்களின் காரணமாக " தகவல் அறியும் உரிமை சட்டம் " நம் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வழக்கமான, பல ஓட்டைகளுடன் அதாவது பதவியில் இருப்பவர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் தப்பித்து க்கொள்ள வசதியாக சில பிரிவுகளை உளடக்கியிருக்கிறது. இருப்பினும் சட்ட வாசகங்களின் அர்த்தம் என்பது , "வாதம் மற்றும் வழக்கின் சாராம்சம் இவற்றின் அடிப்படையில் புதிய விளக்கங்கள் பெறும்" என்பதற்கு இவ்வழக்கு ஒரு உதாரணம்.



Sunday, March 20, 2011

அயோடின் உப்பு விழிப்புணர்வு

பிதர் காடு சோலடியில் 
மகளிர் குழுக்களுக்கு 
அயோடின்  உப்பு 
விழிப்புணர்வு நிகழ்ச்சி 
நடத்தப்பட்டது 





 குந்தலடியில் மளிகை கடைகளில் 
அயோடின்  உப்பு ஆய்வு மற்றும் 
விழிப்புணர்வு நிகழ்ச்சி 
நடத்தப்பட்டது நிகழ்ச்சியை 

துவக்கிவைத்தார்


பொன்னனியில் மகளிர் குழுக்களுக்கு 
அயோடின்  உப்பு 
விழிப்புணர்வு நிகழ்ச்சி 
நடத்தப்பட்டது 

  






நெலாகோட்டையில் மளிகை கடைகளில் 
அயோடின்  உப்பு ஆய்வு மற்றும் 
விழிப்புணர்வு நிகழ்ச்சி 
நடத்தப்பட்டது நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர்  மன்ற தலைவர் துவக்கிவைத்தார்





அயோடின்  உப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது 

தலைமைத்துவம் மற்றும் தர மேம்பாடு பயிற்சி


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் சார்பில் மைய உறுப்பினர்களுக்கு தலைமைத்துவம் மற்றும் தர மேம்பாடு பயிற்சி நடத்தப்பட்டது புகைப்படங்கள் 










Wednesday, February 9, 2011

பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை

பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை

1) நீரின்றி அமையாது உலகு 2) தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே போன்ற அந்தக்காலத் தமிழ் முது மொழிகளிலிருந்தே வாழ்வாதாரமான தண்ணீரின் தேவையையும் முக்கியத்துவத்தையும் தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது தெளிவு.

தொன்று தொட்டே தமிழகத்தில் குறிப்பாக பல்லவர் ஆண்ட தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் பெரும்பாலான ஆறுகளும் ஏரிகளும் மழையை எதிர் பார்த்தவையே. வற்றாத ஜீவநதிகள் இப்பகுதியில் ஏன் பெருவாரியான தமிழர் வாழ்ந்த பகுதியிலேயே இல்லை என்றே சொல்லலாம். எனவே ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது.

காடுகளை அழித்து புதிய நாடுகள் உருவான போதும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவை நீர். எனவேதான் சங்கத் தமிழ் மன்னர்கள் "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர்". நாட்டில் குளம் வெட்டினால் தான் நலம் பெறுகும் என்பதை எந்தளவுக்கு அந்தக் கால ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தப் பட்டினப்பாடல் வரி ஒரு சான்று!

கிட்டத்தட்ட 1600 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூலில் ஒன்றான "சிறுபஞ்சமூலத்தில் " காரியாசான் சுவர்கத்துக்குப் போகும் வழி என எதைக் குறிப்பிடுகிறார் பாருங்கள்

குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும் சுவர்க்கத்(து) தினிது

(குளம் வெட்டுதல், அதனைச் சுற்றி மரக்கிளைகளை நடுதல், மக்கள் நடக்கும் வழியை செதுக்கிச் சீர்திருத்துதல்,தரிசு நிலத்தின் உள்ளிடத்தைச் செப்பம் செய்து உழுவயலாக்குதல் அவற்றுடன் வளமான நீர் வரும் படி தோண்டி சுற்றிலும் சுவர் எழுப்பிக் கிணறு உண்டாக்குதல் என்று சொல்லக் கூடிய இந்த ஐந்து பகுதிகளையும் உண்டாக்கியவன் சொர்கத்துக்கு இனிதாகப் போவான்)

அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது கி பி 2ஆம் நூற்றாண்டிலேயே நல்லாதனார் "திரிகடுகம்" என்னும் மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலில் பின்வருமாறு கூருகிறார்.

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.

( உலகத்தில் மேலான புகழை நாட்டியவனும்,சிறந்த கற்புடைய பெண்ணை மனைவியாகப் பெற்றவனும், குடிக்க நீர் குறைவு படாத படி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும் ஆகிய இம்மூவரும் எக்காலத்திலும் இறவாத புகழுடம்பைப் பெற்றவர்கள்)

எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் எழுந்தும் வீழ்ந்தும் போனாலும் ,எத்தனையோ மன்னர்கள் வந்து போனாலும் 1800 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டுவித்த கரிகால் சோழன் பெயர் இன்றளவும் நிலைத்திருப்பது நல்லாதனார் கணித்தது எவ்வளவு உண்மை என நமக்குணர்த்துகிறது.

இதே அடிப்படையில் பல்லவ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் தொடக்க காலத்தில் பல 'பிரமதேயம் " என்னும் குடியிருப்புகளை ஏற்படுத்தியதல்லாது அந்தக் குடியிருப்புகளுக்கு வேண்டிய நீர் ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். ( பிரமதேயமோ அல்லது அது எதற்காய் உருவாக்கப் பட்டது என்பதோ இக்கட்டுரையின் பேசு பொருளல்ல.ஒவ்வொரு குடியிருப்பு ஏற்படுத்தும் போதும் அதற்குத் தேவையான நீராதாரங்களையும் சேர்த்தே அக்கால மன்னர்கள் எழுப்புவித்தார்கள் என்பதே குறிப்பிடுகிறேன்) எடுத்துக் காட்டாக முதலாம் பரமேசுவர மன்னனின் ஆட்சிக் காலத்தில் ( கி பி 669-700) பரமேசுவர மங்கலம் என்ற பெயரில் பிரமதேயமாக நிலம் கொடுத்தான்.அத்துடன் அவ்வூரில் பரமேசுவர தடாகம் என்று ஒரு ஏரியை ஏற்ப்படுத்திப் பாலாற்றிலிருந்து நீர் கொண்டுவர பெரும்பிடுகு என்னும் கால்வாயையும், அக்கால்வாயிலிருந்து நலைவாய், தலைப் பேழை, ஊற்றுக்கால் என்னும் கிளைகளையும் வெட்டிக் கொள்ள அனுமதியளித்தான் என்பதனை கூரம் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது.

இதே போல இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் உதய சந்திர மண்டலம், ஏகதீர மங்கலம், நயதீர மங்கலம் போன்ற பல ஊர்களை உருவாக்க தானமாக நிலம் கொடுத்து அதற்குத் தேவையான நீராதாரங்களுக்கும் வழிவகை செய்து கொடுத்துள்ளான் என்பதை பல செப்பேடுகள் மூலம் அறிகிறோம்.

தொண்டை நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மிகச் சிறந்த குடியிருப்பு உத்திர மேரூர். சுமார் 5 சதுர கீ மி பரப்பளவில் இந்தப் பரந்த ஊர் அமைந்திருந்தது.10 சேரிகளும் 15 பிடாகை ஊர்களும் இதனுள் அடக்கம். (இந்த ஊரில்தான் குடஓலை முறையில் நிர்வாகக் குழுக்கள் வாரியங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவுக்கே தேர்தல் அறிமுகம் செய்யப்பட்ட நற்பணி நடந்தது) இந்த ஊரின் ஜீவ நாடியாக அமைந்தது "வைரமேகத் தடாகம்" என்னும் பேரேரியாகும். கி பி 739லேயே மகாசபை என்ற ஓர் அமைப்பு செயல் பட்டதும் இச்சபையின் கீழ் பல வாரியங்கள் பகுக்கப் பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கி பி 878ல் ஏரி வாரியம் என்றோரு வாரியம் செயல்பட்டிருப்பதே நீர்ப்பாசனத்துக்கும் நீர் மேலாண்மைக்கும் அளிக்கப் பட்டு வந்துள்ள முக்கியத்துவத்துக்கு சான்றாகும்.

அமைத்ததோடு மட்டுமின்றி வயிரமேகத் தடாகத்தை ஆண்டு தோரும் குழிகுத்திப் பராமரிப்பது ( தூர் வாருவது) முறையாகச் செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கென வணிகர்களும் செல்வந்தர்களும் நன்கொடையும் அளித்துள்ளனர்.கி பி 739லேயே குழி குத்தப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. சேட்டத்தரயன் தான வேந்தன் என்பவன் 20 கழஞ்சு பொன்னும் எரு விலையால் வந்த திரவியத்தை உத்திர மேரூர் சபையினரிடம் கொடுத்து குழி குத்த ஏற்பாடு செய்தான், தந்தி வர்மன் (கி பி 803-ல்) 5 பட்டி நிலத்தைக் கொடையாகப் பெற்ற பெருங்குறி சபையார் அதனைக் கொண்டு ஏரியைத் தோண்டி கரையை உயர்த்தினர். கி பி 883 ல் கழுக்குன்றன் எனும் வணிகன் 100 கழஞ்சு பொன்னும் 28 காடி நெல்லும் கொடையளித்தான் . கி பி 886ல் மன்னிப்பாக்கிழான் என்ற வணிகன் 100 கழஞ்சு பொன்னும் கி பி 886 ல் அவனே மற்றும் 100 கழஞ்சு பொன்னும் கொடுத்தான் என்று பலப் பல செய்திகள் மூலம் எப்படி அந்தக் காலத்தில் தமிழர் நீராதாரங்களான ஏரி,குளம் , கிணறு முதலானவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவைகளை வெட்டுவித்தும் பராமரித்தும் வந்துள்ளனர் என அறியமுடிகிறது.

பொதுவாகவே ஆண்டு தோரும் தூர் வாரப் பட்டுள்ளதை மாமல்லபுரம் பையனூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முன்னரே சொன்னது போல் தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது. கி பி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயேமக்கள் ஏரிகளை உருவாக்கியுள்ளனர்.

கி பி 550ல் சமணத் துறவி வஜ்ர நந்திக்கு பருத்திக் குன்றம் என்ற ஊரை பள்ளிச் சாந்தமாக கொடுத்த போதே ஏந்தல் ஏரி,வேள்வடுகன் ஏரி மற்றும் நீலபாடிவதி, மூலை ஏற்றம், முருக்கங்கேணி போன்ற நீராதாரங்கள் அந்த ஊரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.
கோவில் கட்டும் போதும் ஏரி தோண்டுவதும் முக்கியமான பணியாக நற்பலனைத் தரும் பணியாக மக்கள் கருதினர். காட்டுத் தும்பூரில் 563 ஆம் ஆண்டு கனக வல்லி ஏரி உருவாக்கப்பட்டது. உத்திரமேரூருக்கருகில் மல்லியங்கரணை ஏரி, வெள்ளேரி, தும்பனேரி கார்வதி ஏரி என பல ஏரிகள் ஏற்பட்டுள்ளன.இப்படிப் பலப்பல உதாரணங்கள்.

பின்வந்த சோழர்கள் 11ஆம் நூற்றாண்டில் எடுப்புவித்த சோழகங்க ஏரி( இன்றைய பொன்னேரி) வீர நாராணம் ஏரி ( இன்றைய வீராணம் ஏரி) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏரிகளிலிருந்து நீரை வெளியே எடுப்பதற்குப் பல வழிகளைப் பின்பற்றியுள்ளனர் நம் முன்னோர். கலிங்கு, மதகு , தூம்பு என சில கட்டுமானங்களின் மூலம் நீரை முறையாகப் பயன் படுத்தியுள்ளனர். இன்றைய நீர் நிர்வாகம் அல்லது நீர் மேலாண்மை என்று சொல்லக்கூடிய அறிவுத்துதை (water Management) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்களிடம் இருந்துள்ளது.

நாட்டுக்கால், ஆற்றுக்கால், ஊற்றுக்கால் எனும் பெயர்களில் அக்காலத்தில் கால்வாய்கள் அமைக்கப் பட்டுள்ளன.இவற்றைப் பராமரிக்கவும் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் தனிச்சையாகக் கால் வெட்டுவோர் தண்டிக்கப் பட்டுள்ளனர். நீர் நிலைகளை ஏற்படுத்துவதை தம் வாழ்வின் பெரும் தர்மமாக நினைத்துள்ளனர் மக்கள் . திருவெள்ளரை ஸ்வஸ்திகக் கிணறு ( இன்று நல்ல தமிழில் "நாலு மூலைக் கேணி" என்று அழைக்கப் படுகிறது) அருகில் உள்ள கல்வெட்டு

கண்டார்காணா உலகத்தே காதல் செய்து நில்லாதே
பண்டே பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நய்யதேய்
தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது உலகம் அறிய வைமினே

என்கிறது .அதாவது தம் ஆயுளுக்குப் பிறகும் தம் பெயர் சொல்வது நீருதவும் தர்மம் என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

நீர்நிலைகளை அழித்தல் பெரும் நாசம் என்பதனையும் நம் மக்கள் உணர்ந்து அப்படிச் செய்யப் புகுந்தவர்களை எச்சரித்துள்ளனர்

"கீழ்வேளூர் சபையார் தன்மம். இதற்கு அஹிதம்
செய்தவன் காவிரி குலை குத்தின பாவங்கொள்வான் "

என்று தாராசுரத்தில் கிடைத்த கல்வெட்டு "காவிரிக் கரையைச் சிதைத்த பாவம்" என்று பாவச் செயல்களுக்கே ஒரு reference point ஆக நீர் நிலைகளை அழிப்பதைக் கொள்கிறது

கட்டுரையின் பெறுவாரியான பகுதிகள் நான் வாசித்த முனைவர் சொ.சாந்தலிங்கத்தின் " தமிழர் பண்பாட்டுப் பதிவுகள் " என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

ஆனால் இன்றைய தமிழகத்திலே நடப்பதென்ன ?

Thursday, January 27, 2011

பூவின் மொழி... நிறமா... மணமா...? ஊட்டிக்கு வந்தால் 'இதம்' புரியும்



Front page news and headlines today
கோடை சீசன்... ஊட்டியின் சுற்றுலா மையங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 'கால் வைக்க' முடியாத அளவுக்கு கூட்டம். சமவெளியில் 'சுடும் வெயிலால்' உண்டான உஷ்ணத்தை தணிக்க எண்ணும் மக்கள், இதமான குளிர் காற்றை தேடி அடைக்கலமாக வரும் ஊட்டியில்,பசுமை கொஞ்சும் இயற்கை அழகும், வண்ண மலர்களோடு 'ரீங்காரம்' பாடும் வண்டுகளும் அவர்களை வரவேற்க காத்து கிடக்கின்றன.

இந்த பூக்களை சுமந்த மலையரசியின் மகுடத்திலா சில மாதங்களுக்கு முன் 'உடைசல்' ஏற்பட்டது;வியப்பூட்டும் 'பட்டு போர்வையின்' பசுமைக்குள்ளா நிலம் சரிந்த பெரும் சோகங்கள் நிகழ்தன; இதமான தென்றல் தவழும் 'அமைதி' பள்ளதாக்கிலா 51 உயிர்கள் மூச்சு முட்டி ஜீவ சமாதியாகின என்ற கேள்விகள் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் மனதிலும் எழும் அளவுக்கு, 'ஏழைகளின் சுவிட்சர்லாந்து' என்றழைக்கப்படும் 'ஊட்டி' தனது அழகை மெருகூட்டியுள்ளது. கடந்த நவம்பர் மாத பாதிப்புகளின் சுவடே தெரியாத அளவுக்கு பொலிவாக்கப்பட்டுள்ள இந்த 'சொர்க்கபூமிக்கு' நீங்கள் வருவதற்கு முன், உங்களை வழிநடத்தி செல்லும் சில முக்கிய தகவல்கள் இதோ...!

ஊட்டி தாவரவியல் பூங்கா: ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட காய்கறி தோட்டம் பராமரிக்காமல் விடப்பட்டதால், அப்பகுதியில் ஒரு பூங்காவை துவக்க, ஊட்டியில் வசித்து வந்த ஆங்கிலேயர்கள் நன்கொடை மற்றும் சந்தா வசூலித்தனர். இதில், 1847ம் ஆண்டில் மெட்ராஸ் கவர்னராக இருந்த டூவிடேல் என்பவர், பூங்கா மேம்பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார். இதனை தொடர்ந்து,பூங்காவை பொலிவாக்கும் வகையில், லண்டனில் உள்ள 'க்யூ' பூங்காவில் பணிபுரிந்த அனுபவத்தை பெற்றிருந்த தோட்டக்கலை நிபுணர் ஐவர் என்பவர் பூங்கா கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பூங்காவின் சிறிய பகுதி காய்கறி தோட்டமாகவும், பெரும்பாலான பகுதி சோலையாகவும், முட்புதர் சூழ்ந்தும் இருந்ததை மாற்றி,10 ஆண்டுகள் போராடி லண்டன் 'க்யூ' பூங்காவை போல அழகிய புல்தரைகள் மற்றும் பூந்தோட்டமாக, ஊட்டி தாவரவியல் பூங்காவை மாற்றினார்.

இதை தவிர, தோட்டக்கலை துறையின் மூலம் ஆராய்ச்சிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, 117 குடும்பங்களை சேர்ந்த 2,000 ரக தாவரங்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல், 144 ரக பெரணிகள், 350 வகை ரோஜாக்கள், 60 ரக டேலியா, 30 ரக கிளாடியோலை, 150 ரக கள்ளிகள், டைனோசர் காலத்தில் இருந்த 'ஜிங்கோபைலபா', முதன் முதலில் பேப்பர் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 'போஜ்பத்தர்' என்ற மரம் உட்பட ஏராளமான மர வகைகள் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது.

மான் பூங்கா: ஊட்டி ஏரியின் மறு கரையில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மான் பூங்கா 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 22 கடமான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிய படகு இல்ல சாலை வழியாக இங்கு செல்லலாம். புதிய வரவாக இரண்டு மான் குட்டிகள் 'துள்ளி திரிந்து' வருகின்றன.

தொட்டபெட்டா சிகரம்: தென்னிந்தியாவின் உயரமான சிகரமாக கருதப்படும் தொட்டபெட்டா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2,623 மீ., உயரத்தில் உள்ளது. நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினர் மொழியில், தொட்டபெட்டா என்றால் 'உயரமான மலை' என்று பொருள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினரால் காட்சிமுனை அமைக்கப்பட்டு, 'டெலஸ்கோப்'பில் இருந்து ஊட்டி நகரம், குன்னூர், வெலிங்டன், குந்தா, கோவை, கர்நாடகா, கேரளா பகுதிகளை ரசிக்கலாம். ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது.

குன்னூர் சிம்ஸ்பூங்கா: ஜே.டி.சிம் என்ற ஆங்கிலேயரால், 1874ல் உருவாக்கப்பட்ட சிம்ஸ் பூங்காவில், 1,200க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. 27 வகையான கற்பூர மரங்கள், 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகிதம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா, மரதாகை, யுஜிநாய்டஸ் உட்பட பல வகையான பழமை வாய்ந்த மரங்கள் அலங்கரிக்கின்றன. படகு இல்லம், சிறுவர் பூங்காவின் இடையிடையே அழகிய மலர்களின் அணிவகுப்பு, 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலர் செடிகள் பூத்து குலுங்குவது கண்கொள்ளா காட்சியாகும். குன்னூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவில் சிம்ஸ்பூங்கா உள்ளது

கோத்தகிரி நேரு பூங்கா: கோத்தகிரியின் மையப்பகுதியில், காமராஜர் சதுக்கத்தில் உள்ள நேரு பூங்காவில் பல அரிய வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. அழகிய புல்வெளி, கோத்தரின மக்களின் கோவில் ஆகியவையும் இங்கு உள்ளன. கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், டானிங்டன், ராம்சந்த் ஆகிய பகுதிகளில் இருந்து பூங்காவிற்கு நடந்தே செல்லலாம்.

கல்லட்டி நீர்வீழ்ச்சி: ஊட்டி-முதுமலை சாலையில் 13 கி.மீ., தொலைவில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டிய காலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனங்களில் காணப்படும் அரிய வகை பூக்களும் பூத்திருப்பதை பார்க்க கிடைப்பது பயணிகளுக்கு வரப்பிரசாதம்தான்.

லேம்ஸ்ராக்: சிம்ஸ் பூங்காவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளது. காட்சி முனையில் இருந்து பல ஆயிரம் அடி ஆழமுள்ள பள்ளதாக்கு காட்சிகளை காண்பதும்; பள்ளதாக்கில் கொட்டி கிடக்கும் இயற்கை காட்சிகள் மனதுக்கு இதம் தரும்.

டால்பின்ஸ் நோஸ்: லேம்ஸ்ராக்கில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள டால்பின்ஸ் நோஸ் காட்சி முனையில் டெலஸ்கோப் உள்ளது. பள்ளத்தாக்கு காட்சி முனையில் இருந்து 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு காட்சிகள், கோத்தகிரியில் உள்ள கேத்ரின் நீர்வீழ்ச்சி, மேட்டுப்பாளையம் பகுதி ஆகியவற்றை இங்கிருந்து ரசிக்கலாம். மரங்கள் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்காட்சி முனைக்கு செல்லும் போதே அதன் குளிர்ச்சியின் குதூகலம் பயணிகளை வரவேற்கும்.

கேத்ரீன் நீர்வீழ்ச்சி: பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகள், பாறைகள் வழியாக வரும் கேத்ரீன் நீர்வீழ்ச்சி, காட்சி கோபுரம் கோத்தகிரி அரவேணு பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது. பாசி படிந்த பாறைகள், அழகான நீர்வீழ்ச்சி 'போட்டோ' எடுக்க சிறந்த இடம்.

கோடநாடு காட்சிமுனை: கோடநாடு காட்சிமுனையில் இருந்து பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வனங்கள் மட்டுமே காட்சி கோபுரத்தில் உள்ள 'பைனாகுலர்' மூலம் வரலாற்று சிறப்பு மிக்க சுஜ்ஜல் கோட்டை, அல்லிராணி கோட்டையை காண்பது இதன் சிறப்பம்சம். தெங்குமரஹாடா கிராமத்தின் அழகையும் இங்கிருந்தே ரசிக்கலாம். நீலகிரி மலையில் உருவாகி பவானிசாகர் அணையில் கலக்கும் 'மாயாறு' ஆறு வரையுள்ள அழகிய வயல்வெளிகள், அடர்ந்த வனங்கள், யானைகளின் வழித்தடங்கள், ரங்கசாமி கோவில் மலை உட்பட மலை முகடுகள் அனைத்தையும் இங்கிருந்தே பார்க்கலாம்.

பைக்காரா படகு இல்லம்: பைக்காரா அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும் போது இங்குள்ள அருவி ரம்மியத்தை ஏற்படுத்தும். நீர்வீழ்ச்சியை அடுத்து ஒரு கி.மீ., தொலைவில் பைக்காரா ஏரி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்ட படகு இல்லம் கண்கொள்ளா காட்சியாகவும், சவாரி செய்யவும் விரும்புகின்றனர். இங்கு புதிதாக விடப்பட்டுள்ள 'அட்வென்சர்' படகு இளைய பட்டாளங்களின் வேகத்துக்கு சவால் விடும். பைக்காரா செல்லும் வழியில் பைன் பாரஸ்ட், ஸ்கூல் மந்து, ஷூட்டிங் பாய்ன்ட் சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்தபகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், குப்பை கொட்டினாலோ, இயற்கையை சேதப்படுத்தினாலோ அபராதம் தான். ஊட்டியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம்: கூடலூர் ஒட்டி அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், மான், யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உட்பட விலங்கினங்கள், மயில் உட்பட பறவையினங்கள் வசிக்கின்றன. முதுமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர், ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இவர்கள், வனத்துறை வாகனங்கள் மூலமும், யானைகள் மூலமும் சவாரிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். தற்போது கோடையில் வனத்தீ ஏற்பட்டு வருவதால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. வனத்துறையினர் தேதி அறிவிக்கும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கூடலூரில் இருந்து 17 கி.மீ., தூரத்தில் உள்ளது.

ஊசிமலை: ஊட்டி - கூடலூர் சாலையில், 40 கி.மீ., தொலைவில் உள்ளது ஊசிமலை காட்சி கோபுரம். இங்கிருந்து, கூடலூர், சிங்காரா, நடுவட்டம் மற்றும் முதுமலை வனப்பகுதியை ரசிக்க முடியும்.

ரோஜா மலரே ராஜகுமாரி...: ஊட்டி தாவரவியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டை கொண்டாடும் வகையில், 1996ம் ஆண்டில் அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஊட்டி விஜயநகரப் பகுதி ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டு, 'நூற்றாண்டு ரோஜா பூங்கா' உருவாக்கப்பட்டது. தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் 5 எக்டேர் பரப்பில் 6 தளங்களில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 ரக ரோஜாக்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளில் ரோஜாக்கள் மலர்ந்து வருகின்றன. 2006ம் ஆண்டு ஜப்பானில் நடந்த சர்வதேச ரோஜா கருத்தரங்கில் 'கார்டன் ஆப் தி எக்ஸ்சலன்ஸ்' விருது சர்வதேச ரோஜா சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது நீலகிரிக்கே பெருமையை சேர்த்துள்ளது. ஆசியாவில் அதிகபட்ச ரோஜா ரகங்களை கொண்ட பூங்கா என்ற பெருமையும் இதற்கு உண்டு.

'இலவசமா' ஒரு பூங்கா...! மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊட்டி - பர்ன்ஹில் சாலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் தோட்டக்கலை துறையால் மரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., தூரம் உள்ள இப்பூங்காவில், அல்னஸ் நெப்லென்சிஸ், கேலிஸ்டோமன், கூப்ரசுஸ், மேக்ரோகார்பா உட்பட 100க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இதில், 60க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 'கிரிக்கெட்' பேட் தயாரிக்க பயன்படும் 'வில்லோ' மரமும் இங்குண்டு. பூங்காவை ஒட்டி சதுப்பு நிலம் உள்ளதால், மாலை நேரங்களில் 30க்கும் மேற்பட்ட நீலகிரி வாழ் பறவை இனங்களின் 'இலவச இசை' அனைவரின் மனதுக்கும் இதமளிக்கும். அமைதியான சூழலில் 'புத்தகம்' படிக்க விரும்புபவர்கள் இங்கு வரலாம்.

சவாரிக்கு புதிய படகு இல்லம்...: ஊட்டி நகரின் மத்திய பகுதியில் தற்போதைய ரேஸ்கோர்ஸ் முதல் காந்தல் வரையுள்ள பகுதி முழுவதும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நீர்தேக்கமாக இருந்தது. 1823ம் ஆண்டு அப்போதைய கோவை கலெக்டர் ஜான் சலீவனால், படகு சவாரிக்கும், மீன் பிடிக்கவும் ஏரி உருவாக்கப்பட்டது. 2.75 கி.மீ., நீளமும், 100 முதல் 140 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது. 1877ம் ஆண்டு வரை இந்த ஏரி நீர் குடிநீராக பயன்பட்டு வந்த நிலையில், ஊட்டி நகரிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஏரியில் கலந்ததால் குடிநீருக்கு பயனற்று போனது. தற்போது தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பராமரிப்பில், 65 ஏக்கர் பரப்பில் உள்ள ஏரியில் படகு சவாரிக்காக, 100க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏரியின் மறு கரையில் உருவாக்கப்பட்ட புதிய படகு இல்லம் தற்போது புதிய பொலிவை பெற்றுள்ளது.

'தைய்ய, தைய்யா...' பயணத்தில் குஷி: பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப் பட்ட ஊட்டி மலை ரயில் குழந் தைகளின் மொழியில் டாய் டிரெயின் என அன்புடன் அழைக்கப்படுகிறது. ஊட்டியில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைரயில் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் இயக்கம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குன்னூர் - ஊட்டி இடையே மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணிக்கலாம். தற்போது, இதற்கான பயண சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதால், பயணம் செய்ய விருப்பமுள்ளவர்கள் சற்று முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்து விட்டால், ஏமாற்றம் இருக்காது.  ஊட்டி முதல் குன்னூர் வரை மட்டுமே பயணம் இருந்தாலும் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிடலாம்.

இந்தியச் சரணாலயங்கள்

  இந்தியச் சரணாலயங்கள்

இந்தியாவில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் வனவிலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்று வீரம் என்று மகிழ்ச்சி அடைவதும், அதன் இறைச்சியை உண்பதும், இறைச்சியை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்துவதுமாக பல நோக்கங்கள் இருக்கின்றன. இந்த நோக்கங்களால் அரியவகை பல வனவிலங்குகளும், பறவைகளும் இன்று இல்லாமல் போய்விட்டன. இனியும் இந்த நிலை நீடிக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் இந்திய அரசும் மாநில அரசுகளும் 247 வனவிலங்கு சரணாலயங்கள், 55 தேசீயப் பூங்காக்களையும் உருவாக்கிப் பராமரித்து வருகின்றன. இவற்றில் முக்கியமான சில வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் குறித்த சிறு தகவல்கள்

பொருளடக்கம்

தமிழ்நாடு

தமிழகத்தில், உயிரினங்கள் பாதுகாப்புக்கு எட்டு சரணாலயங்கள்; 13 பறவை சரணாலயங்கள்; ஐந்து தேசிய பூங்காக்கள்; மூன்று புலிகள் சரணாலயங்கள்; நான்கு யானை சரணாலயங்கள்; மூன்று பல்லுயிர் பெருக்கத் தளங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

கிண்டி

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் கிண்டி தேசீயப் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவின் மொத்தப்பரப்பளவு 2.7 சதுர கிலோ மீட்டர்தான். இங்கு பலவகை மான்கள் இருக்கின்றன. இதனருகில் பாம்புப் பண்ணை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயம்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்குறுங்குடி மலைப்பகுதி தொடங்கி அம்பாசமுத்திரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் முண்டந்துறை மலைப்பகுதி வரையிலான வனப்பகுதி களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயமாகும். இது புலிகளுக்கான சரணாலயம் என்றாலும் இம்மலைப் பகுதியில் மிளா, காட்டுப்பன்றி, சிங்கவால் குரங்கு, யானை, உடும்பு, கரடி, பலவகைபாம்புகளும் அதிகம் வாழ்கின்றன.

ஆனைமலை

தமிழ்நாட்டில் பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஆனைமலை வனப்பகுதியான இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 958 சதுர கிலோமீட்டர். இந்த சரணாலயத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை, கடம்பை மான், புள்ளி மான், காட்டுப்பன்றி, கரடி என்று நிறைய வன விலங்குகள் இருக்கின்றன.

முதுமலை

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் முதுமலை வனப்பகுதியான இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 321 சதுர கிலோமீட்டர். இந்த சரணாலயத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை, கடம்பை மான், புள்ளி மான், குரைக்கும் மான், காட்டுப்பன்றிகள், காட்டுப் பூனை, புனுகுப்பூனை, பறக்கும் அணில், பாம்பு வகைகள், பறவை வகைகள் என்று நிறைய வன உயிரினங்கள் இருக்கின்றன.

வேடந்தாங்கல்

தமிழ்நாட்டில் செங்கற்பட்டு ஊரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வேடந்தாங்கல் சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 0.3 சதுர கிலோமீட்டர். இந்த சரணாலயத்தில் நவம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை பல வெளிநாட்டுப் பறவைகள் வந்து இங்குள்ள நீர்நிலைகளில் தங்கி இருக்கின்றன.

கோடிக்கரை

தமிழ்நாட்டில் கோடிக்கரை ஊரிலிருக்கும் வனப்பகுதியில் 17 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த சரணாலயம் இருக்கிறது. இங்கு வெளிநாட்டுப் பறவைகள் ஏராளமாக வந்து தங்கிச் செல்கின்றன.

ஆந்திரா

ஆந்திராவில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

நாகார்ஜீனசாகர் - ஸ்ரீசைலம்

ஆந்திராவின் குண்டூர், கர்நூல், நல்கொண்டா மற்றும் மகபூப் நகர் என்று ஐந்து மாவட்டங்களில் இருக்கும் மிகப்பெரிய நாகார்ஜீனசாகர் வனப்பகுதியான இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 3568 சதுர கிலோமீட்டராகும். இதில் நாகார்ஜீன சாகர் புலிகள் திட்டத்திற்கு மட்டும் 2800 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கிறது. இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, பலவகையான மான், நரி, ஓநாய் மற்றும் முதலை போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

கொல்லேரு

ஆந்திராவின் விஜயவாடா நகருக்கு அருகில் இருக்கும் கொல்லேரு சரணாலயம் ஏரியுடன் 673 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையதாகும். இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையுள்ள காலத்தில் நாரை, வண்ணக் கொக்கு மற்றும் நீர்நிலைப் பறவைகள் சில வந்து இனப்பெருக்கம் செய்து திரும்புகின்றன.

கர்நாடகா

கர்நாடகாவில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

பந்திப்பூர்

கர்நாடகாவில் மைசூரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வனவிலங்குகளுக்கான இந்த தேசீயப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 874 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, பலவகையான மான், நரி, ஓநாய், காட்டு நாய், மலபார் அணில், பச்சைப் புறா, காடை, கவுதாரி மற்றும் முதலை போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

நகர்ஹோலே

கர்நாடகாவில் மைசூரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வனவிலங்குகளுக்கான இந்த குடகுமலைத் தேசீயப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 571 சதுர கிலோமீட்டர். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, காடை, கவுதாரி மற்றும் காட்டுக்கோழி போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பன்னார்கட்டா

கர்நாடகாவில் பெங்களூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த வனப்பகுதியின் பன்னார்கட்டா தேசியப்பூங்காவில் பலவகையான மான்கள் இருக்கின்றன.

ரங்கன் திட்டு

கர்நாடகாவில் ஸ்ரீரங்கப்பட்டினம் ஊருக்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ரங்கன் திட்டு சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் ஜீலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையுள்ள காலத்தில் திறந்த வாய் நாரை, கரண்டி மூக்கன் மற்றும் வெள்ளை இபிஸ் போன்ற நீர்நிலைப் பறவைகள் சில வந்து செல்கின்றன.

கேரளா

கேரளாவில் இருக்கும் முக்கியமான சரணாலயம் பெரியாறு சரணாலயம்தான்.

பெரியாறு

கேரளாவில் இருக்கும் கோட்டயம் எனும் ஊரிலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவிலும் தமிழ்நாட்டில் இருக்கும் தேனி எனும் ஊரிலிருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் பெரியாறு சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 777 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டு எருமை, பலவகையான மான், காட்டு நாய், புலி, பலவகைக் குரங்கு, பறக்கும் அணில்கள், மலை அணில், காட்டுக் கோழி, காட்டு மைனா போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

காசிரங்கா

அஸ்ஸாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 217 கிலோமீட்டர் தொலைவிலும், ஜோர்கட் எனும் ஊரிலிருந்து 84 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் காசிரங்கா சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 430 சதுர கிலோமீட்டர். இது காண்டா மிருகத்திற்கான சிறப்பு சரணாலயமாகும். இங்கு காண்டாமிருகம், யானை, சதுப்பு நில மான், சிறுத்தை, பூனை, மலைப்ப்பாம்பு, சிகப்புக் காட்டுக் கோழி, வாத்து, மானிடர் பல்லி போன்றவை அதிகமாக இருக்கின்றன.

மானஸ்

அஸ்ஸாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூட்டான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மானஸ் நதியுள்ள 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சரணாலயம் இது. இந்த சரணாலயத்தில் புலி, பலவகையான பறவைகள் பல இருக்கின்றன.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்

ஜல்டபாரா

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் ஹாசிமாரா அருகில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப்பரப்பளவு 116 சதுர கிலோமீட்டர். இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டுப் பன்றி, காட்டு எருமை, குரைக்கும் மான், முள்ளம்பன்றி மற்றும் பலவகையான பறவை போன்றவை அதிகமாக இருக்கின்றன.

[தொகு] சுந்தரவனம்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கல்கத்தாவிற்குத் தெற்கே 112 கிலோமீட்டர் தொலைவிலும் போட்கானிங் எனும் ஊரிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் சுந்தரவனம் இருக்கிறது. இந்த சுந்தரவனத்தின் வடக்குப் பகுதியை சஜ்ரகலி சரணாலயம் என்றும் தெற்குப் பகுதியை லோதெய்ன் தீவு சரணாலயம் என்றும் சொல்கின்றனர். இதன் மொத்தப் பரப்பளவு 2585 சதுர கிலோமீட்டர். இங்கு ராயல் பெங்கால் டைகர்ஸ் எனும் சிறப்பு புலி, மான், காட்டுப்பன்றி, பலவிதமான முதலை மற்றும் ஆமை இருக்கின்றன.

பீகார்

பீகார் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

ஹஜாரிபாக்

பீகார் மாநிலத்தில் ராஞ்சி எனும் ஊரிலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவிலும் கோடர்மா எனும் ஊரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இந்த மலைப்பிரதேச சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 186 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, மயில், நீலப்பசு போன்றவை நிறைய இருக்கின்றன.

பலாமாவு

பீகார் மாநிலத்தில் ராஞ்சி எனும் ஊரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் சிப்பாதோஹர் எனும் ஊரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 979 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுஎருமை, குரைக்கும் மான் மற்றும் பலவகையான மான் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

ராதாநகரி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் கோல்ஹாபூர் அருகில் இருக்கும் ராதாநகரி சரணாலாயத்தின் மொத்தப்பரப்பளவு 2072 சதுர கிலோமீட்டர். இது காட்டு எருமைகளுக்கான சரணாலயமாகும். இங்கு காட்டு எருமை, சிறுத்தை, காட்டுப் பன்றி, பல வகை மான்கள் அதிகம் இருக்கின்றன.

பொரிவ்லி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பை அருகில் 34 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பொரிவ்லி ஊரில் உள்ள விலங்கியல் தேசீயப் பூங்காவான இதன் மொத்தப் பரப்பளவு 100 சதுர கிலோமீட்டர். இங்கு சிறுத்தை, காட்டுப் பன்றி மற்றும் பறவைகள் இருக்கின்றன.

டடோபா

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சந்திராபூர் எனும் ஊரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் தெற்கிலும் வரோரா எனும் ஊரில் இருந்து 56 கிலோமீட்டர் தென்மேற்கிலும் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 117 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, கரடி, காட்டு எருமை, கடம்பை மான், காட்டு மாடு, காட்டுப் பன்றி, முதலை ஆகியவை இங்கு இருக்கின்றன.

குஜராத்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

கிர்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் சௌராஷ்டிரப் பகுதியில் உள்ள கிர் காடுகளில் சிங்கங்களுக்கான சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் சிங்கத்திற்கான ஆசிய அளவில் சிறப்பு பெற்ற சரணாலயமாகும். சாசன்கிர் எனும் ஊரிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 1412 சதுர கிலோமீட்டர். இங்கு சிங்கம், சிறுத்தை, காட்டுப் பன்றி, கடம்பை மான், மலைப்பாம்பு, கழுகு மற்றும் கருடன் போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பிரோடன்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம்நகர் எனும் ஊரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கடல் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 271 சதுர கிலோமீட்டர். இங்கு பருவகாலமாக நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை இருக்கிறது. இங்கு ஆக்டோபஸ், பவளப் பூச்சி, பப்பர் மீன், கொக்கு, நாரை போன்றவை இருக்கிறது.

சுரேந்திர நகர்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் தாரங்கத்ரா எனும் ஊரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுரேந்திர நகர் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 3569 சதுர கிலோமீட்டர். இது காட்டுக்கழுதைகளுக்கான சரணாலயம் ஆகும். இந்தக் காட்டுக் கழுதைகள் அரேபியா, துருக்கி, திபெத், மங்கோலியா, ரசியா போன்ற நாடுகளில் மட்டும்தான் இருக்கின்றன. இங்கு காட்டுக் கழுதை தவிர காட்டு மாடு, ஒநாய், கடம்பை மான் போன்றவைகளும் இருக்கின்றன.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

கன்ஹா

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சிரிடோங்கிரி எனும் ஊரில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயம் மண்ட்லா மற்றும் பாலாகாட் எனும் இரண்டு மாவட்டங்களில் மொத்தப் பரப்பளவில் 1940 சதுர கிலோமீட்டர் உள்ளது.இங்கு புலி, மான், காட்டுப் பன்றி, காட்டு எருமை, சிறுத்தை, குரைக்கும் மான், சுண்டெலி மான், முள்ளம்பன்றி, காட்டு மாடு போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பந்தவ்கர்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் உமாரியா எனும் ஊரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 105 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, வெள்ளைப் புலி போன்றவை இருக்கின்றன.

சிவ்புரி

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஜான்சி எனும் ஊரில் இருந்து 94 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிவ்புரி சரணாலயத்தில் கடம்பை மான் மற்றும் காட்டு மாடு போன்றவை அதிகமாக இருக்கின்றன.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

ரண்தம்போர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சவாய் மதாபூர் எனும் ஊரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 392 சதுர கிலோமீட்டர் உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, காட்டுப் பன்றி, கழுதைப்புலி, ஓநாய், காட்டுப் பூனை, புனுகு பூனை, காடை, கவுதாரி, பச்சைப்புறா, சிவப்புக் காட்டுக் கோழி போன்றவைகள் நிறைய இருக்கின்றன.

பரத்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஆலிவர் எனும் ஊரில் தெற்கில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர். இங்கு 350 க்கும் அதிகமான பறவை வகைகள் இருக்கின்றன.

சாரிஸ்கா

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஆலிவர் எனும் ஊரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாரிஸ்கா சரணாலயத்திலன் மொத்தப் பரப்பளவு 197 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை மற்றும் பலவகையான மான்கள் , முதலை போன்றவை அதிகமாக இருக்கின்றன.

ஜெய்சல்மேர் பார்மர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்சல்மேர் நகரைச் சுற்றி அமைந்துள்ள இந்தப் பாலைவனச் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 3000 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்தப் பாலைவனப் பகுதியில் அதிகமாக வளர்ந்துள்ள புதர்ச்செடிப் பகுதிகளில் சில வகை மான்கள், ஓநாய், பாலைவன பூனை, நரி போன்றவைகளுடன் பஸ்டர்டு எனும் அரியவகைப் பறவையும் இங்கு காணப்படுகின்றன.

உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

[தொகு] கார்பெட்

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ராம் நகர் எனும் ஊரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயம்தான் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் சரணாலயம். இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 525 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு புலி, குரைக்கும் மான், புள்ளி மான், கடம்பை மான், காட்டுப் பன்றி, முள்ளம்பன்றி, சிறுத்தை, முள் எலி, மலைப்பாம்பு, கரடி, காடை, கவுதாரி காட்டு மாடு போன்றவைகள் நிறைய இருக்கின்றன.
இங்கு 110 வகையான மரங்கள், 51 வகையான புதர்ச்செடிகள், 33 வகையான மூங்கில்கள் இருக்கின்றன.

தூத்வா

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் தூத்வா எனும் ஊரில் இருக்கும் இந்த சரணாலயம் நேபாள நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 492 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, சிறுத்தை, கரடி, நீலப்பசு, மீன் பூனை, சிறுத்தைப் பூனை, கொம்பு ஆந்தை, கழுகு ஆந்தை, காடை, கவுதாரி, கொக்கு மற்றும் நாரை போன்றவைகள் இருக்கின்றன.

நந்ததேவி

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இமயமலைப் பனிப் பிரதேசப் பகுதியில் இருக்கும் இந்த சரணாலயத்தில் மொத்தப் பரப்பளவு 630 சதுர கிலோமீட்டர். இங்கு ஹிமாலயப் பிரௌன் கரடி, ஹிமாலய கறுப்புக் கரடி, பனிச் சிறுத்தை, கஸ்தூரி மான் மற்றும் பனிப்புழு போன்றவை அதிகமாக இருக்கின்றன.

ஒரிசா

ஒரிசா மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

சிம்லிபால்

ஒரிசா மாநிலத்தில் இருக்கும் பாரிபாடா எனும் ஊரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 303 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு சுண்டெலி மான், புலி, சிறுத்தை, யானை, காட்டு எருமை, பறக்கும் அணில் ஆகியவை அதிகம் இருக்கின்றன.

சில்கா

ஒரிசா மாநிலத்தில் இருக்கும் பால்கான் எனும் ஊரில் இருக்கும் இந்தப் பறவைகள் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 900 சதுர கிலோமீட்டர். இங்குள்ள ஏரியில் பலவகையான கொக்கு, நாரை, போன்ற நீர்நிலைப் பறவைகள் மற்றும் மான்கள் போன்றவைகள் இருக்கின்றன.

சட்கோஜியா கார்ஜ்

ஒரிசா மாநிலத்தில் தென்கனால், பூரி, கட்டாக் மற்றும் பூல்பனி எனும் நான்கு மாவட்டங்களில் இருக்கும் இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர். இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டு எருமை, காட்டுப் பன்றி, குரங்கு மற்றும் காடை, கவுதாரி, பறக்கும் அணில் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

இமாசலப் பிரதேசம்

இமாசலப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

மணலி

இமாசலப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் குலூ எனும் ஊரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மணலி சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு செப்டம்பர், அக்டோபர் மற்றும் மே, ஜீன் ஆகிய மாதங்கள் பருவகாலமாக இருக்கிறது. இங்கு தார், சேரோ, கோரல், கலிஜ், கோக்லாஸ், சக்கோர் மார்டன் எனும் இமாசலப் பிரதேசத்தில் மட்டும் இருக்கும் அபூர்வ விலங்குகள், புனுகுப் பூனை, பறக்கும் நரி ஆகியவை இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான சில சரணாலயங்கள் மற்றும் தேசீயப் பூங்காக்கள்.

டச்சிகாம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் எனும் ஊரில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 142 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு ஏப்ரல் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரையிலான எட்டு மாதங்கள் பருவகாலமாக இருக்கிறது. இங்கு மான், ஹிமாலயக் கரடி, பனிச்சிறுத்தை, காட்டு ஆடு, பனிப்பிரதேச மயில், இபெக்ஸ், கஸ்தூரி மான் ஆகியவை இருக்கின்றன.