Saturday, June 23, 2012

உணவு கலப்படம் விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஊட்டி:"கவர்ச்சிகர விளம்பரங்களில் வரும் பொருட்களை கவனமுடன் வாங்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் சார்பில், ஊட்டி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

பயிற்சி இயக்குனர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்ரமணியம், "நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் முன்னிலை வகித்தனர். 

முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெள்ளி பேசுகையில், ""உணவில் கலப்படம் அதிகரித்து வருகிறது. கடுகு, பருப்பு, தேயிலை தூள், மைதா மாவு போன்ற அத்தியாவசிய பொருட்களில் செய்யப்படும் கலப்படும் பலவித நோய்கள் ஏற்பட காரணமாகிவிடுகிறது. கவர்ச்சிகர விளம்பரங்கள் மூலம் விற்பனைக்கு வரும் "ஜங்க்புட்' உணவுப் பொருட்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும். உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிக்க பிரத்யேக உபகரணம் உள்ளது; இதில், 20 வகை பரிசோதனை உபகரணங்கள் உள்ளன.  
இதை மக்கள் பயன்படுத்தி, கலப்படத்தை கண்டறிய வேண்டும்,'' என்றார்.

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் பேசுகையில், ""சாலையோர தள்ளு வண்டிக் கடைகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் தரமற்றவை,'' என்றார். 

பயிற்சி மைய பயிற்சியாளர் சதீஷ், பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர்.

 "கலப்படம் செய்யும் கல் நெஞ்சங்களே' என்ற தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உணவு கலப்படம் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Wednesday, June 6, 2012

நுகர்வோர்களிடம் வசூல் செய்யும் கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள்

கூடலூர் :
கூடலூர் :"நுகர்வோர்களிடம் வசூல் செய்யும் கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனு:
கடந்த ஆண்டு முதல் மாநில அரசு,கேபிள் கார்ப்பரேஷன் துவங்கி குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கி வருகிறது. "கேபிள் இணைப்புக்கு மாத கட்டணம் 70 ரூபாய் வசூல் செய்து, அதில் 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்; முதலில் 90 சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்,' என தெரிவிக்கப் பட்டது.
தற்போது 120 சேனல்கள் வழங்க அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால், பல பகுதிகளில் குறைந்த சேனல்கள் வழங்குவதுடன், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு பதில் மாதம் 100 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதியில் இதே நிலை தொடர்கிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கு ரசீதும் வழங்குவதில்லை. இது குறித்த புகார்களுக்கும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் தாசில்தார் நடவடிக் கை எடுப்பதில்லை.
"இவர் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் நபர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்,' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்­ளது.
எனவே, நீலகிரியில் செயல்படும் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து, அதற்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்கவும்; அனைத்து சேனல்களையும் முறையாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே செயல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப் படும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள் ளார்.
வி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனு:
கடந்த ஆண்டு முதல் மாநில அரசு,கேபிள் கார்ப்பரேஷன் துவங்கி குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கி வருகிறது. "கேபிள் இணைப்புக்கு மாத கட்டணம் 70 ரூபாய் வசூல் செய்து, அதில் 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்; முதலில் 90 சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்,' என தெரிவிக்கப் பட்டது. தற்போது 120 சேனல்கள் வழங்க அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால், பல பகுதிகளில் குறைந்த சேனல்கள் வழங்குவதுடன், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு பதில் மாதம் 100 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதியில் இதே நிலை தொடர்கிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கு ரசீதும் வழங்குவதில்லை. இது குறித்த புகார்களுக்கும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் தாசில்தார் நடவடிக் கை எடுப்பதில்லை.
"இவர் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் நபர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்,' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்­ளது.
எனவே, நீலகிரியில் செயல்படும் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து, அதற்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்கவும்; அனைத்து சேனல்களையும் முறையாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே செயல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப் படும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள் ளார்.

சேரங்கோடு பகுதியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் 110வது இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் 110வது இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், பந்தலூர்-கூடலூர் வட்டார நுகர்வோர் சங்கம் இணைந்து பந்தலூர் அஅஙீருகேயுள்ள சேரங்கோடு இலவச தையல் பயிற்சி மையத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தின.
டாக்டர் அமராவதி ராஜஅஙீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.126 பேர் பங்கேற்ற முகாமில், 12 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் விஜயன் சாமுவேல் வரவேற்றார்.சங்க தலைவர் விஜயசிங்கம், எச்.ஏ.டி.பி., ஒருங்கிணைபாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் எலிசெபத், தனிஷ்லாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜா நன்றி கூறினார்

அடிப்படை தேவைக்கு மட்டும் மின்சாரத்தை பயன்படுத்த அறிவுரை

கூடலூர் : "மின்சாரத்தை அடிப்படை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் சேமிக்க முடியும்,' என கூடலூரில் நடந்த மின் சக்தி சேமிப்பு தின விழாவில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின் பகிர்மான வட்டம், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில், மின் சக்தி சேமிப்பு நாள் விழா கூடலூர் ஜானகியம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. செயற்பொறியாளர் ஆல்துரை வரவேற்றார். விழாவுக்கு மேற்பார்வை பொறியாளர் நிர்மலா ஞானபுஸ்பம் தலைமை வகித்து பேசினார். கூடலூர் பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரி விரிவுrai யாளர் பிரகாஷ் பேசுகையில்,"" மின்சாரத்தை அடிப்படை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் சேமிக்க இயலும்; இதன் மூலம் பெரும் பயன் ஏற்படும்,'' என்றார். கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் , மின் சேமிப்பில் நுகர்வோரில் பங்கு பற்றி பேசினார். விழாவில், குன்னூர் செயற்பொறியாளர் நடராஜன், உதவி செயற் பொறியாளர்கள் சிவகுமார், பிரேம்குமார், உதவி பொறியாளர்கள் பாலாஜி, பாலகணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊட்டி செயற் பொறியாளர் சிவராஜ் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்