Wednesday, January 30, 2013

2012 annual report








 







காந்தி நினைவு தினம் அனுசரிப்பு


காந்தி நினைவு தினம் அனுசரிப்பு


பந்தலூர், : பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை 
முன்னிட்டு காந்தி உருவபடத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. 

மது ஒழிப்பு குறித்து பொது மக்களுக்கு சேவை மையத்தினர் துண்டுபிரசுரங்களை வினியோகித்தனர். 

 இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

 மகாத்மா காந்தி பொது சேவை மையம் அமைப்பாளர் நவுசாத், பந்தலூர்- கூடலூர் நுகர்வோர் சங்க தலைவர் விஜயசிங்கம், தானிஸ்லாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்

alt

இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்

இயற்கை மற்றும் விலங்குகள்

  • ஊட்டி :ஊட்டி மரவியல் பூங்காவில் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், உலக சதுப்பு நில பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊட்டி சி.எஸ்.ஐ., ஜெல் நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.எஸ்.ஐ., மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்று இயற்கை காப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீ வஸ்தவா பேசுகையில், ""உலகம் முழுவதும் பிப்., 2ம் தேதி உலக சதுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

  • தற்போதைய சூழலில் பல்வேறு சதுப்பு நிலங்கள் நிலை மாற்றப்பட்டுள்ளன. இவைகளினால் காற்று, நீர், ஒளி மாசு ஏற்பட்டு பல நிலைகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றன. மனிதர்கள் மட்டுமின்றி இயற்கையும், இயற்கை வாழ் நீர் வாழ்வினங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களும் பெரிதும் பாதிக்கின்றன. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பல ஆடம்பர பொருட்கள் இயற்கையை பாதிப்படைய செய்வதுடன் சிறிய உயிரினங்களின் வாழ்வையும் சிதைக்கின்றன.

  • வனத்தீயினால் நீலகிரியில் மிக முக்கிய வன உயிரின மண்டலமான முதுமலை தேசிய பூங்காவான முக்கூர்த்தி போன்ற இயற்கை பாதுகாப்பு பகுதிகள் சேதமடைகின்றன. நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் இயற்கையை பாதிக்காத பொருட்களாக பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தும் சோப்பு முதல் எழுது பொருட்கள் மற்றும் இதர உபயோக பொருட்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் நம்பக பொருட்களாக அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கை நமக்கு நல்ல நீர், காற்று, நல்ல சூழலையும், பலவித நன்மைகளையும் தருகிறது. நாமும் இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் இயற்கை நேசிக்கும் குடும்பமாக மாற்ற வேண்டும்,'' என்றார்.

  • சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு பேசுகையில், ""சதுப்பு நிலங்கள் சோலைக்காடுகள், மலைகளை ஒட்டிய நீர்வளங்கள் அடங்கிய பகுதியாகும். இவை பல வகையில் நமக்கு பயன் தருகின்றன. சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் போது ஏற்பட்ட உயிர் சேதங்கள், பொருட்சேதங்கள் அதிகரிக்க கடல் சார்ந்த பகுதிகளில் இருந்த மாங்ரோ காடுகள் அழிக்கப்பட்டதே ஆகும். சதுப்பு நிலங்களில் உள்ளூர் தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நீண்ட கால பாதுகாப்பினை சதுப்பு நிலங்கள் பெறும்,'' என்றார். நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""சதுப்பு நிலங்களில் பல்வேறு உயிரினங்கள் மூலிகை செடிகள் உள்ளன.

  • இங்குள்ள நீராதாரத்தை நம்பியே இவை வாழ்கின்றன. சதுப்பு நிலங்கள் அழியும் போது, இதை சார்ந்துள்ள உயிரினங்கள், தாவரங்கள் அழிந்து போகிறது. வீடுகளில் பூச்செடிகள் வளர்ப்பது போல் மூலிகை செடிகளையும் வளர்க்க வேண்டும்,'' என்றார். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இவற்றை அரசும் மக்களும் காப்பாற்ற முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

  • கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""இயற்கையை பாதுகாத்ததினால் சுத்தமான காற்று, நீர், உணவை முன்னோர்கள் பெற்றனர். அதேபோல வருங்கால சந்ததியினர் நல்ல சூழலில் வாழ நாம் தற்போதுள்ள இயற்கையை காப்பாற்ற முன்வரவேண்டும்,''என்றார். மாணவர்களுக்கு மரவியல் பூங்காவை சுற்றி காண்பித்து அங்குள்ள சதுப்பு நில பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை ஹெலினா வரவேற்றார். ஆசிரியர் ஹொனரின்வுட் நன்றி கூறினார்.

பந்தலூரில் ஆதிவாசி விவசாய பொருள் விற்பனை நிலையம்


பந்தலூரில் ஆதிவாசி விவசாய பொருள் விற்பனை நிலையம்



ஊட்டி, : ஊட்டியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் தனி அலுவலர் கோபால், பொது விநியோக கூட்டுறவு சார் பதிவாளர் ரவி ஆனந்த் மற்றும் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மக்கள் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், 

நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க சூப்பர் மார்கெட்டில் தரமற்ற காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 
மேலும், பல ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படுவதில்லை. இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

 பல நியாயவிலை கடைகளில் மின் தாரசு பயன்படுத்துவதில்லை. எடையளவுகள் சரியில்லாமல் எடை குறைவாக உள்ளதாக பலர் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

பந்தலூரில் உரம் விற்பனை செய்ய கிடங்கு அமைக்க வேண்டும். 

சேரம்பாடி அருகே மண்ணாத்திவயல் பகுதியில் கடை அமைக்க வேண்டும்.  

அனைத்து நியாய விலை கடைகளிலும் அயோடின் உப்பு விற்பனை செய்யப்பட வேண்டும். 

கூட்டுறவுத்துறை சார்பில் பந்தலூரில் சூப்பர் மார்கெட் திறக்க வேண்டும். 

கொளப்பள்ளியில் கூட்டுறவு வங்கி திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்கள் கூறுகையில், அளவகள் குறித்து நியாயவிலை கடை ஊழியர்கள் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்படும். 

பந்தலூரில் ஆதிவாசிகளுக்கான விவசாய பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மையம் திறக்கப்படும். 

மண்ணாத்திவயல் பகுதியில் ரேஷன் கடை அமைக்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலவச அறை வசதி செய்து கொடுக்கப்பட்டால் விரைவில் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

அனைத்து கடைகளிலும் இருப்பை பொருத்து அயோ டின் உப்பு விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்படும்.

ஏற்கனவே தேவாலாவில் உள்ள சூப்பர் மார்கெட் நஷ்டத்தில் இயங்குகிறது. எனவே புதிய சூப்பர் மார்கெட் அமைப்பது கடினம். இருப்பினும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.''

கொளப்பள்ளி பகுதியில் கூட்டுறவு வங்கி திறக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு அனுமதி பெற்றவுடன் வங்கி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

கூட்டுறவு நிறுவனம் மூலம் பந்தலூர், தேவாலா, கூடலூர் மற்றும் ஊட்டியில் மருந்துகடைகள் செயல்படுகின்றன. இங்கு தரமான மருந்து பொருட்கள் 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுக்கின்றது. 

கோத்தகிரியில் புதிதாக கூட்டுறவு மருந்துகடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். 

கூட்டத்தில் புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜன், நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
.

ஊட்டி : நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய- மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், நியாய விலை கடைகளில் மின்னணு தராசுகளில் பேட்டரி சார்ஜ் நிற்பதில்லை எனக்கூறி பழைய எடைகற்களை கொண்ட தராசுகளை பயன்படுத்துகின்றனர். புதிய பேட்டரி மாற்றி மின்னணு தராசுகள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பந்தலூரில் உர குடோன் அமைக்க வேண்டும்; பங்குகளில் மதியத்திற்கு மேல் மண்ணெண்ணெய் தருவதில்லை, பணியாளர்கள் சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும், என முறையிட்டார். இதற்கு பதிலளித்து துணை பதிவாளர் கேசவன் பேசுகையில்,மின் தட்டுப்பாடு காரணமாக மின்னணு எடை தராசுகள் பேட்டரி பழுதடைந்திருக்கலாம். புதிய மின்னணு தராசுகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய எடை கற்கள், தராசுகள் தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளது. தற்காலிக அவசர தேவைக்கு கற்கள், தராசு பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் 
தரமற்ற பொருட்கள், தகவல் இல்லாத பொருட்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும். 
காலாவதி பொருட்கள் கடையில் இருப்பு வைக்க கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பந்தலூரில் என்.சி.எம்.­எஸ்., உர குடோன் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும், என்றார். கூட்டத்தில், கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், தனி அலுவலர்கள், நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

உடல் உறுப்பு தானம் செய்ய, இளைஞர்கள் முன்வர வேண்டும்

ஊட்டி:உடல் உறுப்பு தானம் செய்ய, இளைஞர்கள் முன்வர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.மத்திய அரசின் நேரு யுவகேந்திரா நீலகிரி கிளை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் இணைந்து, ஊட்டி ரமணா பயிற்சி மையத்தில், தேசிய இளையோர் தின விழாவை நடத்தின.பயிற்சி மைய முதல்வர் சுரேஷ் வரவேற்றார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், உடல் உறுப்பு தானம் செய்வது, மிகப் பெரிய தியாகம். ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறையாவது ரத்த தானம் செய்திருக்க வேண்டும், என்றார்.
நேரு யுவகேந்திரா நீலகிரி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் பேசுகையில்,இளைஞர் மன்றங்கள் சிறப்பாக செயல்பட, நேரு யுவகேந்திரா பல உதவிகளை செய்து வருகிறது. போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் வெளிவர வேண்டும், என்றார். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பேசுகையில், இளைஞர்கள், அரசியல், ஜாதி, மதம், இனம், ரசிகர் மன்றங்களை கடந்து, சேவை செய்ய வேண்டும், என்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நஞ்சன், மலைச்சாரல் கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் பேசினர். மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

கூடலூர் அரசு மருத்துவமனையில் "பிரசவ பிரிவு' துவங்க வேண்டும்


கூடலூர்:கூடலூர் அரசு மருத்துவமனையில், அனைத்து வசதிகளுடன் கூடிய "பிரசவ பிரிவு' துவங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:

கூடலூர்  பந்தலூர்   பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு  விவசாயிகள் வசித்து வருகின்றனர். இங்கு வாழ்வோர் தனியார் மருத்துவமனைகள் போதுமானதாக இல்லாததால், மருத்துவ தேவைகளுக்கு, கூடலூர் அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர். இங்கு, நோயாளிகள் சிறப்பான சிகிச்சையை பெற்று பயனடைந்து வருகின்றனர். எனினும், ஆபத்தான அவசர சிகிச்சைக்கு, ஊட்டி, கேரளா மாநிலம் கல்பட்டா, சுல்தான்பத்தேரிக்கு பரிந்துரை செய்வதால், நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்துக்கு முன் மற்றும் பின் கால பரிசோதனை சிறப்பாக உள்ளது. 

ஆனால், பிரசவ நேரத்தில் அவசர சிகிச்சைக்கான வசதி இல்லாததால், 50 கி.மீ., தொலைவிலுள்ள ஊட்டி அரசு  சேட் தாய் சேய்  மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு கொண்டு செல்லும் பொது அசம்பாவிதங்கள்  நடை பெறும் ஆபத்து உள்ளது. ஊட்டி அரசு  சேட் தாய் சேய்  மருத்துவ மனையில் பெரும்பாலும் கூடலூர் பகுதி மக்கள் பிரசவத்திற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.   சேட் தாய் சேய்  மருத்துவ மனையிலும் போதிய கட்டில் வசதி இல்லாமல் ஒரு கட்டிலில் இரு நபர்கள் தாங்கும் நிலையும் உள்ளது 

எனவே  கூடலூர் அரசு மருத்துவமனையில் சிசேரியன் பிரிவு, குழந்தைகள் பாதுகாப்புக்கான தனி பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய "பிரசவ பிரிவு' துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல இங்கு கட்டி முடிக்கப்பட்ட நிலுவையில் உள்ள ரத்த வங்கியை உடனடியாக திறக்க வேண்டும் 

 "எக்ஸ்ரே' பிரிவுக்கு தற்போது வாரம் இருமுறை மட்டுமே எடுக்க படுகிறது இதற்க்கு  நிரந்த ஊழியரை நியமிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலூர் நகரின் முக்கிய பகுதியான பழைய பேருந்து நிலையத்தில் ஒரு டாக்டருடன் செயல்படும் கூடலூர் நகர அரசு மருந்தகத்தில், சிகிச்சைக்காக தினமும் 200 முதல் 300 நோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயாளிகள் விரைவில் எளிதில் சிகிச்சை பெற இந்த மருந்தகம் உதவுகிறது எனவே நோயாளிகளின் சிரமத்தை போக்க, கூடுதல் டாக்டரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.