Friday, November 28, 2014

நவம்பர் 30-ம் தேதி ஞாயிற்று கிழமை மதியம் 1.30 மணிக்கு

ன்பு நண்பர்களே நலமா? வளமான வாழ்த்துக்கள்.

நான் பங்கேற்ற   கலைஞர் தொலைகாட்சி நெஞ்சு  பொறுக்குதில்லையே  உணவு கலப்படம் 
நிகழ்ச்சி எதிர்வரும்   நவம்பர் 30-ம் தேதி ஞாயிற்று கிழமை மதியம் 1.30 மணிக்கு
ஒளிபரப்பாகிறது   நிகழ்ச்சியை பார்த்து அதற்க்கான  நிறை குறைகளை எனக்கு தெரிவியுங்கள் 
நன்றி 
Dear friends  How are you?  30.Nov 2014 Sunday
1.30-PM telecast I attend  Kalainger TV Nenju porukkuthillaiye prrogramme

Kind watch


S.SIVASUBRAMANIAM, President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND  ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.   E.MAIL: cchepnlg@gmail.com    cchep.siva@gmail.com  
94 88 520 800 - 94 898 60 250  -  944 29 740 75  - 948 639 34 06   Web:  www.cchepnlg.blogspot.in   www.cchepeye.blogspot.in   Facebook:   http://facebook.com/cchepnilgiris

Monday, November 24, 2014

இயற்கை பாதுகாப்பு தினம்

அத்திக்குன்னா அரசு உயர் நிலை பள்ளியில்
இயற்கை பாதுகாப்பு தினம் கடைபிடிக்க பட்டது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், தேசிய பசுமை படை ஆகியன சார்பில் அத்திக்குன்னா அரசு உயர்நிலை பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கபட்டது.  பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதர சுந்தரம்  தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் இயற்கை பாதுகாப்பின் அவசியங்கள் குறித்து பேசும்போது நமக்கு உணவு, உடை, நீர், காற்று என அனைத்தும் இயற்கையே தருகிறது.  நமது செயல்களால் இயற்கை பதிப்புகள் அதிகரிக்கிறது.  இயற்கையில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள் நமக்கே பாதிப்பாக அமைகிறது.  நமது தேவைகளை குறைத்து கொண்டு இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்வதால் இயற்கை அழிவை தடுக்க முடியும்.  இயற்கைக்கு பாதிப்பு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது.   நமது சந்ததியினர் நலமாக வாழ நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துகொன்டனர்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி ஆசிரியர் பிரதீப் வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் ரகுபதி நன்றி கூறினார்.

Sunday, November 23, 2014

 மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகோ செலின் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சிவராஜ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ஆல்தொரை பேசும்போது தற்போது மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகின்றது. மின் உற்பத்தி மேற்க்கொள்ள கூடுதல் செலவுகள் மற்றும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.   தமிழகத்தினை விட மற்ற மாநிலங்கள் குறிப்பாக அரியானா மேற்குவங்காளம் மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின்சார தட்டுபாடு அதிகமாக உள்ளது. மின்தட்டுபாடுகளை போக்க மின்சாரத்தினை சிக்கனமாக செலவிடுவது அவசியமாகிறது. குண்டுபல்புகளை மாற்றி சி.எப்.எல் அல்லது எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துவது. மின் சாதன பொருட்களை சுவர்களின் ஓரத்தில் வைக்காமல் இடைவெளி விட்டு வைப்பது தேவையற்ற நேரங்களில் மின்சார உபயோக பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது பல்புகள் நமக்கு தேவைக்கேற்ப தாழ்வாக அமைத்துக்கொள்ளல் போன்றவை மின்சாரத்தினை சிக்கனப்படுத்த எளிய வழிகள் ஆகும். மின்சார சிக்கனத்தின் மூலம் மாதந்திர மின்செலவும் குறையும். அரசும் தற்போது 500 யூனிட் வரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே மானியம் வழங்குகிறது. தற்போது 35க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களில்  சோலார் மூலம் மின்உற்பத்தி செய்து பயன்படுத்த மாநில அரசு முடிவு செய்து நடைமுறைபடுத்தி வருகின்றது.  மேலும் பல்வேறு அரசு நிறுவனங்களிலும் சோலார் மின்சக்தி பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வீடுகளில் சோலார் மூலம் மின்தேவைகளை அமைத்துகொண்டால ரீதொழிற்சாலைகளுக்கு மின்சாரம் பயன்படுத்த முடியும். தற்போதைய சூழலில் வினாக பயன்படுத்தும் மின்சாரத்தினை சேமித்தாலே மின்தட்டுபாட்டினை பெருமளவு குறைக்க முடியும். அனைவரும் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருஙங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார். முடிவில் மாணவி      நன்றி கூறினார்.

Saturday, November 22, 2014

நவம்பர் 30-ம் தேதி கலைஞர் தொலைகாட்சி நெஞ்சு பொறுக்குதில்லையே பாருங்கள்

அன்பு நண்பர்களே நலமா? வளமான வாழ்த்துக்கள்.

நான் பங்கேற்ற 
கலைஞர் தொலைகாட்சி நெஞ்சு பொறுக்குதில்லையே
உணவு கலப்படம் 
நிகழ்ச்சி எதிர்வரும் 
நவம்பர் 30-ம் தேதி 
ஞாயிற்று கிழமை 
மதியம் 1.30 மணிக்கு
ஒளிபரப்பாகிறது 
நிகழ்ச்சியை பார்த்து அதற்க்கான 
நிறை குறைகளை எனக்கு தெரிவியுங்கள் 
நன்றி 
Dear friends
How are you?
30.nov 2014
Sunday

1.30-PM telecast I attend 
Kalainger TV
Nenju porukku thillaiye prrogramme

Kind watch


S.SIVASUBRAMANIAM, President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
94 88 520 800 - 94 898 60 250  -  944 29 740 75  - 948 639 34 06

Sunday, October 26, 2014

பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல் பயன்கள்

பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல் பயன்கள்
நுகர்வோர் அறிவது அவசியம்.


அத்திக்குன்னா அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற 5வது ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) S  பிரதீப் தலைமை தாங்கினார்.  பள்ளி ஆசிரியர் R  ரகுபதி வரவேற்றார்.  
குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை துவக்கி வைத்த கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்  சு.சிவசுப்பிரமணியம் பேசும்போது அனைவரும் நுகர்வோராக இருக்கிறோம் ஆனால் சிறந்த நுகர்வோராக இல்லை. பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல்கள், பயன்கள் குறித்து அறிந்து கொள்வதில்லை.  இதனால் விளம்பரங்களில் சொல்லப்படும் பற்பசை, முடிக்கான எண்ணை, ஷாம்பு,  வளருவதற்காக ஊட்டசத்து பானங்கள், அழகு சாதனங்கள்  என அனைத்தையும் உண்மை என நம்பி வாங்கி ஏமாறுகிறோம்.  நுகர்வோர்கள் ஏமாறாமல் இருக்க பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல், பயன்கள் குறித்த  விழிப்புணர்வு தேவை.  இதனை மக்களிடம் ஏற்படுத்த பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தபடுகின்றன.  நுகர்வோர் மன்றங்கள் மூலம் அரசின் செயல்பாடுகள், தேவைகள், தரம், உணவுக் கலப்படம், போலிகள், பொருட்கள் குறித்த தகவல்கள், குறைபாடுகளை களையும் முறைகள்,  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய சட்டங்கள் குறித்தும் மாதந்தோறும் நடத்தப்படும் நுகர்வோர் மன்ற கூட்டங்களில் பேசப்பட்டு விவாதிக்கபட்டு மாணவர்கள் மூலம் குடும்பங்கள், நண்பர்கள் ஊர் மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு செல்ல குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்க படுகின்றன.  என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய  செயலாளர் பொன்.கணேஷன் பேசும்போது நுகர்வோர் புகார்களை சுட்டி காட்ட வேண்டும்.  அதன் மூலம் நமக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய முடியும்.  மீண்டும் ஏமாறாமல் இருக்க முடியும்.  பத்திரிக்கைகள், புத்தகங்கள் வாசிப்பின் மூலம் நாட்டின் நிகழ்வுகளை அறிந்து கொள்வது மாணவர்களிடையே பொது அறிவை வளர்க்கும் என்றார். 
தொடர்ந்து நுகர்வோர் மைய நிர்வாகி சத்திய சீலன் ஆசிரியர்கள் ராமஜெயம் பிரமிளா, சௌமியா ராமன், வசந்த், ரவிகுமார் பேசினார்கள். முடிவில் ஆசிரியர்  தேன்மொழி  நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday, October 25, 2014

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?

நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?


முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.
வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.
கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.
பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.
பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.
அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.
சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.
 
 
 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

Friday, October 24, 2014

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள்

மூன்று மண்டலங்களான எலும்பு மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம் இவற்றை பலப்படுத்தக்கூடிய இயற்கை உணவுகள் என்ன என்ன என்ன என்பதைப்பற்றி நாம் பார்ப்போம்.
தினசரி காலையில் பப்பாளிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம், தேங்காய்த் துருவல் அதாவது, பப்பாளிப்பழம் 300 கிராம், பேரீச்சம்பழம் 6 பழம், அத்திப்பழம் 4 பழம், தேங்காய் துருவல் 50 கிராம் இதனுடன் தினசரி ஒரு டம்ளர் பால் இதை காலை உணவாக யார் ஒருவர் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு நான் சொன்ன எலும்பு, நரம்பு, தசை மண்டலக் கோளாறுகள் அனைத்தும் முழுமையாக தீரும். என்னதான் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்தாலும் கூட முறையான உணவு இல்லாத பட்சத்தில் உடற்பயிற்சியின் பலனே கிடைக்காத சூழல் ஏற்படும். உடற்பயிற்சி செய்யக்கூடிய ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நான் சொன்ன இந்த உணவுமுறையைத் தொடர்ந்து சாப்பிடும் பொழுது எலும்பு வன்மை, நரம்பு வன்மை, தசை வன்மை கண்டிப்பாக உண்டாகும்.
arokkiyam1காலை உணவை பெரும்பாலும் பழ உணவாகவோ, கீரை உணவாகவோ, பருப்பு உணவாகவோ, பயறு உணவாகவோ, உணவு சுழற்சி செய்கிற பொழுது இன்னும் நல்ல பலனைப் பெற முடியும். காலை உணவில் அடிப்படையில் ஒரு நாளைக்கு நான் சொன்ன பப்பாளி உணவை எடுக்கலாம். அடுத்த நாள் இரண்டு ஆப்பிள் பழத்தை நன்றாக தோல் சீவி சிறு துண்டுகளாக்கி கூடவே 10லிருந்து 20 வரை முந்திரிபருப்பு சேர்த்து சூடான பாலில் போட்டு வைத்து அதை தினசரி சாப்பிடுவது. இதை ஒரு நாள் சாப்பிடலாம். ஆப்பிள், முந்திரி, பால் கலவை காலை உணவாக எடுக்கும் பொழுது சருமம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். சதைக்கட்டு உண்டாகும், நரம்புகள் இறுகும், அதேபோல் எலும்பு நன்றாக வன்மையுறும். எலும்புக்குத் தேவையான வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைய கிடைக்கக்கூடிய சூழல் உண்டாகும். ஆக ஆப்பிள், பால், முந்திரிபருப்பு இந்தக் கலவையைப் சாப்பிடும் பொழுது மிக முக்கிய பலனைப் பெற முடியும்.
arokkiyam2அதே போல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிபருப்பு, அக்ரூப் பருப்பு, சாரப்பருப்பு, சாலான் மிஸ்திரி, சபேத் மிஸ்ரி, வெள்ளரி விதை, பூசணி விதைஇவையனைத்தையும் சம அளவு கலந்து பொடியாக வைத்துக்கொண்டு தினசரி காலையில் பாலில் கலந்து ஒரு வேளை உணவாக சாப்பிடுவது. அல்லது இந்தப் பொடியை தோசைமாவில் ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டு தேக்கரண்டி கலந்து இந்த சத்தான தோசையை சாப்பிடலாம். நீங்கள் இயல்பாக சாப்பிடக்கூடிய தோசை புளிப்புத்தன்மை மட்டுமே இருக்கும். உலர்பருப்புகள் சேர்ந்த பொடியை புளிப்பு மாவில் சேர்க்கும் பொழுது அந்தப் புளிப்பு சமச்சீர் படுத்தப்படுவதனால் அது அமில உணவாக மாறாமல் சத்தான உணவாக மாறக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதனால்தான் புளிப்பு மாவில் செய்யக்கூடிய தோசையைக் கூட முடக்கத்தான் கீரையையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து தோசையாக செய்து சாப்பிடும் பொழுது அந்த புளிப்புத்தன்மை முழுமையாக சரியாகக்கூடிய தன்மை உண்டு. அதே நேரத்தில் அந்த தோசையை மருந்தாக்கக்கூடிய தன்மையை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். நான் சொன்ன உலர் பழங்களையும் நீங்கள் பயன்படுத்தும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
arokkiyam3இன்னும் சொல்லப்போனால் காலை உணவாக முருங்கைக்கீரை கூட்டைக் கூட சாப்பிடலாம். ஒரு சிலருக்கு நாட்டுக்கோழி முட்டை சாப்பிடக்கூடிய பழக்கம் இருக்கும். அந்த மாதிரி இருக்கக்கூடியவர்கள் முருங்கைக்கீரை, நாட்டுக்கோழி முட்டை, மிளகு தூள் இதை சேர்த்து வைத்து தொடர்ந்து விடாமல் 48 நாட்கள் சாப்பிடுகிற பொழுது நான் சொன்ன எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசை மண்டலம் எல்லாமே முழுமையாக சரியான முறையில் கட்டப்படும். ஒரு சில மனிதர்களைப் பார்த்தோம் என்றால் நாற்பது வயது மனிதனைப் பார்க்கும்பொழுது கூட, வயது உங்களுக்கு 70 இருக்குமா? என்று கேட்கத்தோன்றும். இன்னும் ஒரு சிலருக்கு 55 வயதாகியிருக்கும், உங்களுக்கு 40 இருக்குமா? என்று கேட்கத்தோன்றும். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் அவர்களுடைய உணவுப்பழக்கம். உடலைப் பேணக்கூடிய முறைகளைத்தான் நாம் சொல்ல முடியும். ஆக இந்த மூன்று மண்டலங்களையும் ஒழுங்காகக் முறையாகக் கட்டக்கூடிய ஆண்களும் பெண்களும் நல்ல சீரான உடலமைப்பைப் பெற முடியும்.
செரிமான மண்டலம்:
arokkiyam4இந்த மூன்று மண்டலங்கள் ஒழுங்காக முறையாக இருக்கும் பட்சத்தில் செரிமான மண்டலம் முறையாக வேலை செய்யும். நம் உடம்பிலேயே பார்த்தோம் என்றால் செரிமான மண்டலம் தான் வாய் முதல் குதம் வரை இருக்கக்கூடிய மிகப்பெரிய மண்டலம் என்று சொல்ல வேண்டும். வாயில் ஆரம்பிக்கக்கூடிய செரிமான மண்டலம் நாம் ஏதாவது சாப்பிடும் பொழுது அந்த உணவுக்கலவையோடு உமிழ்நீர் கலவையும் சேர்ந்து சில என்சைம்கள், நொதிகள் எல்லாம் சுரந்து அது உணவுப் பாதை வழியாக இறைப்பை அடைந்து அங்கு சில என்சைம்கள் சுரக்கப்பட்டு நாம் சாப்பிட்ட அந்த உணவானது நல்ல கூழாகி சத்தாக மாறி அந்த சத்து மட்டும் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு, அது சத்தாக மாற்றக்கூடிய சூழல் நடக்கும். ஆக நாம் எடுக்கக்கூடிய உணவில் இருக்கக்கூடிய சத்துப் பொருட்கள் எல்லாமே உடம்பில் சென்று முழுமையான அளவில் நிரவவேண்டும் என்றால் முறையான செரிமானத்தன்மை வேண்டும். முறையான செரிமானத்தன்மை வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த மூன்று மண்டலங்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். எலும்பு, நரம்பு, தசை யார் ஒருவருக்கு ஒழுங்காக இருக்கிறதோ அவருக்கு மட்டுந்தான் நல்ல முறையான செரிமான சக்தி இருக்கும், முறையான செரிமான சக்தி இருக்கும். முன் சொன்ன எலும்பு, நரம்பு, தசை மண்டலங்களை வலுப்படுத்தக்கூடிய இயற்கை உணவுகளை நீங்கள் தொடர்ந்து எடுக்கிற பொழுது கண்டிப்பாக செரிமான சக்தி மிக அற்புதமாக இருக்கும்.
நான் முன்பே சொன்னமாதிரி எப்பொழுது பார்த்தாலும் புளித்த மாவில் செய்த உணவுப்பொருட்கள், எண்ணெயில் வறுக்கக்கூடிய பொருட்கள், எண்ணெய்கள் கலந்த உணவுகள், நெய் கலந்த உணவுகள், பேக்கிங் உணவுகள், துரித உணவுகள் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கிற பொழுது கண்டிப்பாக மாவுச்சத்து மிக அதிகமாகி நம் உடம்பில் இருக்கக்கூடிய சுவாசக்குழாயிலிருந்து, உணவுக்குழாயிலிருந்து, இறைப்பையிலிருந்து கல்லீரலிலிருந்து, சிறுகுடல்-பெருகுடலிலிருந்து அனைத்தையும் கெடுக்கக்கூடிய சூழல் ஏற்படும். ஆக இன்றைய காலகட்டத்தில் எந்த அளவிற்கு நாம் மாவுப் பொருளை குறைத்து மற்ற பொருளை சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு நல்ல உடல் நலம் பெற முடியும்.
ஆக எல்லா நோய்களுக்குமே மூலம் என்று பார்க்கும் பொழுது நம் உடம்பில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மண்டலமான செரிமானமண்டலம். எனவே செரிமான மண்டலக்கோளாறு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். நான் சொன்ன பழங்கள், கீரைகள், பருப்புகள் எல்லாமே நம் மண்டலங்களை முழுமையாக சரிசெய்யும். அதே மாதிரி செரிமானமண்டலக் கோளாறு இல்லாமல் இருக்கவேண்டும் என்றால் சிறுதானியங்கள் சார்ந்த உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும். சிறுதானியங்கள் என்று சொல்லப்படுகிற வரகு, திணை, குதிரை வாலி, சாமை, கம்பு, சோளம், ராகி விடாமல் தொடர்ந்து சாப்பிடும் பொழுது செரிமான கோளாறு இருக்காது.
காலை உணவை பழஉணவாகவும், கீரை உணவாகவும் எடுத்துக்கொண்டு, மதிய உணவை சிறுதானியங்கள் அடிப்படையில் உள்ள உணவாக நாம் சாப்பிட்டு வரும்பொழுது செரிமானக்கோளாறு இல்லாத தன்மை இருக்கும். செரிமானக்கோளாறு இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து நார்ச்சத்து உள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டே வரவேண்டும். நார்ச்சத்து உள்ள உணவுகளையும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து எடுக்கிற பொழுது கண்டிப்பாக செரிமான கோளாறு இருக்கவே இருக்காது. அதற்கு ஒரு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் இஞ்சி. இஞ்சியைத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரும்பொழுது செரிமானக்கோளாறும் இருக்காது அதே நேரத்தில் கை, கால் வலி அசதி, சோர்வு போன்ற பிரச்சனையும் இருக்காது. அதற்கு காரணம் என்னவென்றால் இஞ்சியில் இருக்கக்கூடிய நார்த்தன்மை, சுண்ணாம்புத்தன்மை(கால்சியம்) இந்த இரண்டும் இஞ்சியில் இருக்கிறது என்பதால்தான் இஞ்சியை ஒரு செரிமான காரியாக பயன்படக்கூடிய சூழல் உண்டு.
arokkiyam6நாம் சில நேரங்களில் நிறைய சாப்பிட்டப்பிறகு இஞ்சி மிட்டாய், இஞ்சி முராப்பா இதெல்லாம் சாப்பிடும் பொழுது நாம் சாப்பிட்ட சாப்பாடு முறையாக செரிமானமாகக்கூடிய தன்மை உண்டு. மதிய உணவில் யார் ஒருவர் நிறைய மாவுச்சத்துள்ள பொருளை எடுக்கிறாரோ பின்னாளில் நீரிழிவு வரக்கூடிய சூழல், இதயம் சார்ந்த பிணிகள் வரக்கூடிய சூழல் இருக்கும். மதிய உணவில் மாவுச்சத்தை எந்த அளவிற்கு குறைக்கிறோமோ அது நரம்புகளுக்கு நல்லது.
சிலருக்கு நாம் சொல்லுவோம், ‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்பது போல மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வரக்கூடிய சூழல் எவர் ஒருவருக்கு இருக்கிறதோ கண்டிப்பாக அவருக்கு நரம்பு தளர்வாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இன்னும் சில மாதங்களில் அவருடைய உடல்கூறு மாறப்போகிறது, வயிறு போடப்போகிறது, அதீத பருமன் உண்டாகப்போகிறது என்பதெல்லாம் அதனுடைய அறிகுறியாக இருக்கும். ஆக மதிய உணவு என்பதை நம்மை தூண்டக்கூடிய(stimulate) விசயமாக இருக்கவேண்டும். நம்மை மறுபடியும் மற்ற காரியங்களில் செயல்படக்கூடிய, மூளை சார்ந்த காரியங்கள் செயல்படக்கூடிய தன்மைக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடியதாக அந்த மதிய உணவு இருக்க வேண்டும்.
arokkiyam9அந்த மதிய உணவு சிறுதானியங்கள் அடிப்படையில் இருக்கும் பொழுது குறிப்பாக நாம் சொல்லும் உணவு வரகு. வரகரிசியை 100 கிராம் வாங்கி சமையல் செய்தோம் என்றால் கிட்டத்தட்ட அதில் கிடைக்கக்கூடிய நார்ச்சத்து 7லிருந்து 8 கிராம் கிடைக்கும். ஆனால் அதே 100 கிராம் அரிசியை சமையல் செய்தோம் என்றால் நமக்குக் கிடைக்கக்கூடிய நார்ச்சத்து என்பது 200 மில்லி கிராம். ஆக ஒரு நாளைக்கு சராசரியாக ஆரோக்கியமாக ஒரு மனிதன் நகர்ப்புற வாழ்க்கையில் தன்னுடைய வாழ்நாளை கழிக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 2 கிராம் அளவுக்காவது நார்ச்சத்து உள்ள உணவுகள் சாப்பிட வேண்டும். ஆக 2 கிராம் அளவு நார்ச்சத்து உணவு எடுக்காத ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி அவர்களுடைய குடல் இயல்பாகவே உப்பக்கூடிய தன்மை உருவாகும்.
arokkiyam7எந்த ஒரு மனிதனுக்கு குடல் பெரிதாக (உப்ப) ஆரம்பிக்கிறதோ, கண்டிப்பாக உடல் பெரிதாகிவிடும். உடல் உப்ப ஆரம்பித்துவிடும். ஒரு மனிதனுக்கே பார்த்தோம் என்றால் குடல் பலம் உடல்பலம் என்று சொல்லுவோம். யாருக்கு குடல் நல்ல பலமாக இருக்கிறதோ அவரிடம்தான் நம்பிக்கையைப் பார்க்க முடியும், பொறுமையைப் பார்க்க முடியும், ஒரு செயல்பாட்டை பார்க்க முடியும், குறிக்கோளை நோக்கி ஓடக்கூடிய தன்மையைப் பார்க்க முடியும். எந்த ஒரு மனிதனுக்கு குடல் பலகீனமாகிறதோ அவனுடைய உணவு சரியில்லை என்பதுதான் இங்கு நாம் சொல்ல வேண்டும். குடல் என்பது செரிமான மண்டலத்தில் வரக்கூடிய பிரதானமான ஒரு விசயம். இந்த செரிமானமண்டலம் ஒழுங்காக முறையாக செயல்படவேண்டும் என்றால் மாவுச்சத்தைக் குறைப்பது, சிறுதானியங்களை சேர்ப்பது என்ற செயலுக்கு நாம் வரவேண்டும். சிறுதானியங்களிலிருந்து அபரிமிதமான இரும்புச்சத்து, அபரிமிதமான கால்சியம், அபரிமிதமான நார்ச்சத்து. ஒரு உடம்பை கட்டமைக்கக்கூடிய செயல்களில் இந்த சத்துக்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின், நார் இந்த நான்கும் ஒழுங்காக முறையாக எந்த உணவில் கிடைக்கிறதோ அந்த ஒரு உணவுதான் ஆரோக்கியமான தேகத்திற்கு வித்திடக்கூடிய ஒரு சூழலை உண்டாக்கும். ஆக செரிமானமண்டலக் கோளாறு இல்லாமல் தினசரி உணவை நாம் செம்மைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மதிய வேளையில் எடுக்கக்கூடிய உணவு என்பது செரிமானப்பிரச்சனை இல்லாத உணவாக இருக்க வேண்டும்

அத்திக்குன்னா குடிமக்கள் நுகர்வோர் மன்ற 5வது ஆண்டு துவக்க விழா

அத்திக்குன்னா அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற 5வது ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) S  பிரதீப் தலைமை தாங்கினார்.  பள்ளி ஆசிரியர் R  ரகுபதி வரவேற்றார்.  
குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை துவக்கி வைத்த கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்  சு.சிவசுப்பிரமணியம் பேசும்போது அனைவரும் நுகர்வோராக இருக்கிறோம் ஆனால் சிறந்த நுகர்வோராக இல்லை. பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல்கள், பயன்கள் குறித்து அறிந்து கொள்வதில்லை.  இதனால் விளம்பரங்களில் சொல்லப்படும் பற்பசை, முடிக்கான எண்ணை, ஷாம்பு,  வளருவதற்காக ஊட்டசத்து பானங்கள், அழகு சாதனங்கள்  என அனைத்தையும் உண்மை என நம்பி வாங்கி ஏமாறுகிறோம்.  நுகர்வோர்கள் ஏமாறாமல் இருக்க பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல், பயன்கள் குறித்த  விழிப்புணர்வு தேவை.  இதனை மக்களிடம் ஏற்படுத்த பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தபடுகின்றன.  நுகர்வோர் மன்றங்கள் மூலம் அரசின் செயல்பாடுகள், தேவைகள், தரம், உணவுக் கலப்படம், போலிகள், பொருட்கள் குறித்த தகவல்கள், குறைபாடுகளை களையும் முறைகள்,  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய சட்டங்கள் குறித்தும் மாதந்தோறும் நடத்தப்படும் நுகர்வோர் மன்ற கூட்டங்களில் பேசப்பட்டு விவாதிக்கபட்டு மாணவர்கள் மூலம் குடும்பங்கள், நண்பர்கள் ஊர் மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு செல்ல குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்க படுகின்றன.  என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய  செயலாளர் பொன்.கணேஷன் பேசும்போது நுகர்வோர் புகார்களை சுட்டி காட்ட வேண்டும்.  அதன் மூலம் நமக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய முடியும்.  மீண்டும் ஏமாறாமல் இருக்க முடியும்.  பத்திரிக்கைகள், புத்தகங்கள் வாசிப்பின் மூலம் நாட்டின் நிகழ்வுகளை அறிந்து கொள்வது மாணவர்களிடையே பொது அறிவை வளர்க்கும் என்றார்.  
தொடர்ந்து நுகர்வோர் மைய நிர்வாகி சத்திய சீலன் ஆசிரியர்கள் ராமஜெயம் பிரமிளா, சௌமியா ராமன், வசந்த், ரவிகுமார் பேசினார்கள். முடிவில் ஆசிரியர்  தேன்மொழி  நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.















அத்திக்குன்னா அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற 5வது ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) S  பிரதீப் தலைமை தாங்கினார்.  பள்ளி ஆசிரியர் R  ரகுபதி வரவேற்றார்.  
குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை துவக்கி வைத்த கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்  சு.சிவசுப்பிரமணியம் பேசும்போது அனைவரும் நுகர்வோராக இருக்கிறோம் ஆனால் சிறந்த நுகர்வோராக இல்லை. பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல்கள், பயன்கள் குறித்து அறிந்து கொள்வதில்லை.  இதனால் விளம்பரங்களில் சொல்லப்படும் பற்பசை, முடிக்கான எண்ணை, ஷாம்பு,  வளருவதற்காக ஊட்டசத்து பானங்கள், அழகு சாதனங்கள்  என அனைத்தையும் உண்மை என நம்பி வாங்கி ஏமாறுகிறோம்.  நுகர்வோர்கள் ஏமாறாமல் இருக்க பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல், பயன்கள் குறித்த  விழிப்புணர்வு தேவை.  இதனை மக்களிடம் ஏற்படுத்த பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தபடுகின்றன.  நுகர்வோர் மன்றங்கள் மூலம் அரசின் செயல்பாடுகள், தேவைகள், தரம், உணவுக் கலப்படம், போலிகள், பொருட்கள் குறித்த தகவல்கள், குறைபாடுகளை களையும் முறைகள்,  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய சட்டங்கள் குறித்தும் மாதந்தோறும் நடத்தப்படும் நுகர்வோர் மன்ற கூட்டங்களில் பேசப்பட்டு விவாதிக்கபட்டு மாணவர்கள் மூலம் குடும்பங்கள், நண்பர்கள் ஊர் மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு செல்ல குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்க படுகின்றன.  என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய  செயலாளர் பொன்.கணேஷன் பேசும்போது நுகர்வோர் புகார்களை சுட்டி காட்ட வேண்டும்.  அதன் மூலம் நமக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய முடியும்.  மீண்டும் ஏமாறாமல் இருக்க முடியும்.  பத்திரிக்கைகள், புத்தகங்கள் வாசிப்பின் மூலம் நாட்டின் நிகழ்வுகளை அறிந்து கொள்வது மாணவர்களிடையே பொது அறிவை வளர்க்கும் என்றார்.  
தொடர்ந்து நுகர்வோர் மைய நிர்வாகி சத்திய சீலன் ஆசிரியர்கள் ராமஜெயம் பிரமிளா, சௌமியா ராமன், வசந்த், ரவிகுமார் பேசினார்கள். முடிவில் ஆசிரியர்  தேன்மொழி  நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.









ம்

Monday, October 20, 2014

உதகை அருகே  காத்தாடிமட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் அதிகரட்டி மின் வாரியம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன் இனைந்து எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நெடுமாறன் தலைமை வகித்தார்.  நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் வரவேற்றார்.  

அதிகரட்டி மின் வாரிய உதவி மின் பொறியாளர் நிர்மல்குமார்  பேசும்போது தற்போது உலக அளவில் வெப்பமயமாதலினால் மிக பெரிய ஆபத்து ஏற்படவுள்ளது.  தற்போது மின் உற்பத்தி அதிக அளவு அனல் மின் நிலையங்கள் முலமே உற்பத்தி செய்யபடுகிறது. இவற்றில் இருந்து வெளியாகும் வாயுக்கள் முலமும் உலக வெப்பமயமாதல் ஏற்படுகிறது.  நாம் வெப்பமயமாதலை தடுக்க மின்சாரத்தினை சிக்கனப்படுத்த வேண்டும்.  நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு மின்சார பொருட்களுக்கும்  மின்தேவை உள்ளது.  சராசரியாக 60  வாட்ஸ் தரகூடிய வெளிச்சத்தினை காட்டிலும் இரு மடங்கு வெளிச்சத்தினை 16 வாட்ஸ் சி எப் எல் பல்பில்  பெறலாம்.  தற்சமயம் LED பல்புகள் 6 வட்ஸ் பல்புகள்  60 வாட்ச் குண்டு பல்புகள் தரும் வெளுச்சைதினை தருகிறது.  இவற்றை பயன் படுத்துவாதல் மின் கட்டணம் 5 மடங்கு குறையும் சாதாரண ஜீரோ வாட்ஸ்  பல்புகளே 12 வாட்ஸ் வரை மின்சாரத்தினை எடுத்து கொள்கிறது. எனவே ஒவ்வருவரும் மின்சாரத்தினை சிக்கனபடுத்திட வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நாம் அண்றாடம் பயன் படுத்தும் பொருட்களான  வாசிங் மெசின் அயன்பாக்ஸ் உள்ளிட்டவற்றில்  3 ஸ்டார் குறியீடு இருப்பின் பயன்படுத்தலாம் ISI தர குறியீடு பெற்ற பொருட்கள் மின் செலவையும் கட்டுபடுத்தும்.  தேவையற்ற பொது மின்சார பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் சூரிய சக்தி மின் சக்தியை பயன்படுத்தலாம். மின்சாரம் சிக்கனம் செய்வதன் மூலம் தொழில் சாலை களுக்கு மின் தேவையைபூர்த்தி செய்ய முடியும் இதனால் தொழில் வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் நாம் உதவலாம் என்றார்.

மின் பாதுகாப்பு மற்றும் மின் சிக்கனம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் அதிகரட்டி மின் வாரிய ஊழியர்கள் ரமேஷ், ஈஸ்வரன், சங்கர், சுப்பிரமணி,  ரவிகுமார் பள்ளி ஆசிரியர்கள் கட்டபொம்மன், விஜய் கண்ணன், மூர்த்தி, கணேஷ் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஆசிரியர் லோகநாதன்  நன்றி கூறினார்.

Saturday, October 18, 2014

உலக உணவு தினத்தினை முன்னிட்டு உணவு பாதுகாப்பும், இயற்கை உணவும்

உதகை அருகே சிவசைலம் சாம்ராஜ் மேல்நிலை பள்ளியில் உலக உணவு தினத்தினை முன்னிட்டு உணவு பாதுகாப்பும், இயற்கை  உணவும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு  கருத்தரங்கு நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நீலகிரி  மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு  ஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாங்கினார்.  பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார்.  பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற மாணவி சந்தியா வரவேற்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் இன்று நம்மை நோயாளிகளாக மாற்றி வருகிறது.  விளம்பரங்களில் வரும் உணவுகளையும் ஊட்டசத்து பாணங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம்.  இவற்றினால் எந்த பயனும் இல்லை. அதுபோல பதப்படுத்தபட்ட உணவுகள்,   ரெடிமேட் உணவுகள் பலவற்றிலும்  கெடாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள் உடலுக்கு பதிப்பையும் நோயினை உருவாக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.  நொறுக்கு தீனியாக உண்ணக்கூடிய சிப்ஸ், லேஸ் உள்ளிட்டவைகளினால் இதய கோளாறுகள் மற்றும் கேன்சர் வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.  எனவே  இவற்றை தவிர்த்து சாதாரண உணவுகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.   http://cchepnlg.blogspot.inhttp://cchepeye.blogspot.inhttp://consumernlg.blogspot.in/

நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசும்போது   தற்போது  சைவ உணவுகளை தவிர்த்து அசைவ உணவுகளை அதிகம் உண்ணுகிறோம்.  கோழி ஆடு மாடு உள்ளிட்டவைகளை உணவுக்கு வளர்க்க செலவிடும் உணவு வகைகள் அளவுகள் மக்கள் பலருக்கு உணவு அளிக்க முடியும்,  மேலும் தற்போது உணவுக்கு வளர்க்கபடுபவை மருந்துகள் இட்டு வளர்க்கபடுகிறது இவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது. சிறு தானிய உணவுகள், தாவர உணவுகள் அதிக பயன்கள் தரக்கூடியது என்றார்.
நிலகிரி நுகர்வோர் கூட்டமைப்பு செயலாளர் வீரபாண்டியன் பேசும்போது இயற்கை உணவுகளில் மட்டுமே அதிக ஊட்ட சத்துகள் உள்ளது.  உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் பெறலாம்.  உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, கலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனம், ஊட்டசத்து விவரங்கள், சேர்க்கபட்டுள்ள பொருட்களின் விவரங்களை பார்த்து வாங்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் நுகர்வோர் மன்ற மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற மாணவன் கோகுல் நன்றி கூறினார்.
pls visit our webshttp://cchepnlg.blogspot.inhttp://cchepeye.blogspot.inhttp://consumernlg.blogspot.in/

Friday, October 17, 2014

கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,

கூடலூர் :"நுகர்வோர்களிடம் வசூல் செய்யும் கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் மாவட்ட கலெக்டருக்கு  அனுப்பியுள்ள மனு:

கடந்த 2011 ஆண்டு முதல் மாநில அரசு,கேபிள் கார்ப்பரேஷன் துவங்கி குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கி வருகிறது. "கேபிள் இணைப்புக்கு மாத கட்டணம் 70 ரூபாய் வசூல் செய்து, அதில் 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்; முதலில் 90 சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்,' என தெரிவிக்கப் பட்டது. தற்போது 120 சேனல்கள் வரை  வழங்க அரசு வலியுறுத்தி வருகிறது.  
ஆனால், பல பகுதிகளில் குறைந்த சேனல்கள் வழங்குவதுடன், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு பதில் மாதம் 100 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதியில் இதே நிலை தொடர்கிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கு ரசீது வழங்க வேண்டும் என தமிழ்நாடு கேபிள் டிவி கழகம் அறிவுறுத்தி அதன் மாதிரியும் அனைத்து ரேசன் கடைகளிலும் ஒட்டி வைக்க பட்டுள்ளது ஆனால் இதுவரை யாரும்  ரசீது  வழங்குவதில்லை.  பல செய்தி சேனல்கள் மற்றும் விளையாட்டு சேனல்கள் இருட்டிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்ப படுகிறது.  உள்ளூர் சேனல்கள் அதிக அளவில் ஒளிபரப்பபடுகிறது. 
எனவே, நீலகிரியில் செயல்படும் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து, அதற்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்கவும்; அனைத்து சேனல்களையும் முறையாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதே செயல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப்படும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

Saturday, October 11, 2014

சாக்லேட் திங்க ஆசையா?

சாக்லேட் திங்க ஆசையா?

குழந்தைகளே! அம்மாவிடம் அடம் பிடித்து காசு வாங்கியவுடன் என்ன செய்வீர்கள்? கடைக்கு ஓடி கண்ணாடிக் குடுவைக்குள் இருக்கும் கண்ணைப் பறிக்கும் வண்ணக் கலரில் உள்ள சாக்லேட்டைத் தானே வாங்குவீர்கள். அந்த வண்ணக் கலர் பிளாஸ்டிக் காகிதத்தையா உண்கிறீர்கள்? இல்லை, உள்ளே உள்ள சாக்லேட்டைத் தானே சாப்பிடுகிறீர்கள்.

Sea Turtle caught in the plastic bag
ஏன் வெறும் 3 கிராம் எடை கொண்ட சின்ன சாக்லேட் துண்டுக்கு கலர்கலராய் 3 வகை உறைகள் தெரியுமா? எல்லாமே நம்மளை ஏமாற்றத்தான். நாம் அந்த சாக்லேட் உறைக்கும் சேர்த்துத்தான் காசு கொடுக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. சாக்லேட்டை வாங்கிய உடனேயே எங்கே அதைப் பிரிக்கிறோமோ அங்கேயே விட்டெறிந்து விடுகிறோம் இல்லையா? நீங்கள் விட்டெறிந்த அந்த உறையை, குப்பையை உங்கள் வயதை ஒத்த ஏழைச் சிறுவர், சிறுமிகள் பொறுக்கி எடுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் அதை என்ன செய்கிறார்கள்? உடைந்த கண்ணாடி, காகிதம், பிய்ந்த செருப்பு, பிளாஸ்டிக் பை இவற்றை பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்றுவிடுவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கிறது.

சரி, அந்த சாக்லேட் உறையை யாரும் பொறுக்காமல் விட்டால் என்ன ஆகும்? காற்றடிக்கும் திசையில் எல்லாம் பறந்து நாம் நடக்கும் பாதையெல்லாம் இறைந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணோடு மண்ணாக மக்காமல், அப்படியே கிடந்து நிலத்தை பாழ்படுத்திக் கொண்டிருக்கும். அப்படியில்லாத நிலையில், சாக்கடையில் விழுந்து அடைத்துக் கொள்ளும். பிறகு சுத்தம் செய்யும்போது ஆற்றில் சேர்ந்து பின்னர் கடலுக்குச் சென்றுவிடும். இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அந்த சாக்லேட் தாளை மீன்கள் சாப்பிட்டுவிட்டு வயிற்றில் சிக்கி இறந்து போகவும் நேரலாம்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் தின்றுவிட்டுத் தூக்கி எறியும்போது எத்தனை பிரச்னைகள் ஏற்படும்? உங்கள் ஊரில், ஏன் இந்தியாவிலுள்ள அனைத்து சிறுவர், சிறுமியரும் சாக்லேட் தின்றுவிட்டு உறையை தூக்கி எறிந்தால் ஏற்படும் பிரச்னை எவ்வளவு பெரியது. எவ்வளவு குப்பைகள் சேரும். அதெல்லாம் சாக்கடையில் விழுந்தால் சாக்கடை முழுமையாக அடைத்துக் கொள்ளும், இல்லையா. பிறகு வீட்டைச் சுற்றி சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்கும். துர்நாற்றத்தையும், கொசுத் தொல்லையையும் பொறுத்துக் கொள்ள முடியாது. நிம்மதியாக படிக்க முடியாது, சாப்பிட முடியாது, நிம்மதியாக தூங்கவும் முடியாது. சரி, அத்தனை குப்பையும் கடலில் கலந்தால், எத்தனை மீன்கள், உயிரினங்கள் சாகும்? மற்றொரு உயிர் அழிவதை நாம் விரும்புவதில்லை, இல்லையா.
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
சரி, அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல், குப்பைத் தொட்டியில் போடப் பழக வேண்டும். நீங்களே அட்டைப் பெட்டியில் குப்பைத் தொட்டி செய்து, அதில் பழைய காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில் போன்ற வீட்டில் தேவைப்படாத பொருட்களைச் சேகரித்து விற்கலாம். அதில் கிடைக்கும் பணத்தை நோட்டு வாங்கவோ, புத்தகம் வாங்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். அப்பா, அம்மாவும் பாராட்டுவார்கள்.
இனிமேல் காசு கிடைக்கும்போது, சாக்லேட் வாங்குவதற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அவற்றின் தோலும் எளிதில் மக்கிப் போகும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

Friday, October 10, 2014

தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/





















கூடலூர் பாத்திமா  பெண்கள்  மேல்   நிலை பள்ளியில் தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு  நடைபெற்றது தென்னிந்திய தேயிலை வாரியம் குன்னூர், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில்   நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் உதவி மண் வள பாதுகாப்பு அலுவலருமான  சுந்தர லிங்கம் தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியை கூடலூர் குடிமை பொருள் தனி வட்டாச்சியர் முத்து  துவக்கி வைத்தார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்து பேசும்போது இந்தியாவில் 83 சதவீத மக்கள் தேநீரை குடிக்கின்றனர்.  இதில் நல்ல சுவை மிகுந்தது நீலகிரி தேயிலை.  இந்த பெயரை தக்க வைத்து கொள்ள கலப்பட தேயிலையை கண்டறிந்து களைவது  அவசியமாகிறது.  கலப்பட தேயிலை கண்டறிந்தால் மாணவர்கள் புகார்  தெரிவிக்க வேண்டும் என்றார்.

தேயிலை வாரிய உதவி இயக்குனர்  C .K  ரமேஷ் பேசும்போது   தேயிலை தற்போது வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வகையான தேயிலைகள் தயாரிக்க படுகின்றன.  தேநீர் அருந்துவதால்  உற்சாகம் கிடைகிறது, நரம்பு மண்டலம் சீரிய முறையில் செயல்படுகிறது, இதயத்தினை பலபடுத்துகிறது,  மாணவர்கள் அதிகம் தேநீர் அருத்துவதால் படிப்பில்  கவனம் செலுத்துவதோடு நினைவாற்றலும் பெருகும், எலும்புகளை ஊக்க படுத்துகிறது இதுபோன்று  பல்வேறு பயன்கள் நமக்கு கிடைக்கிறது.  அனைத்து வகையான தேநீரும் ஒரே மாதிரியான பயன்களை தருகிறது.  அனைவரும் தேநீரை அருந்தலாம் என்றார்.

தேயிலை வாரிய தொழிற்சாலை அலுவலர் சுனில்குமார் பேசும்போது இந்தியா, சீனா, இலங்கை, Uk, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தேயிலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.  தேயிலை சட்டத்தில்  தேயிலை துளில் கலப்படம் செய்வது தண்டனைக்குரியது என குறிப்பிடபட்டுள்ளது .  தேயிலையில் கலப்படம் இருப்பின் பச்சை தண்ணீரில் சாயம் வருவதன் மூலமும்,  வெள்ளை பேப்பரில் சாயம் படிவத்தை வைத்தும் கண்டறியலாம்.  மேலும் உள்ளங்கையில் தேயிலை துளை வைத்து கசக்கி பின்னர் முகரும் போது தேயிலையின் வாசனை வரும் இதனை வைத்தும் தரமான தேயிலையை அறியலாம்.  என்றார்.

உதவி மின் செயற் பொறியாளர் முரளிதரன் பேசும்போது  இன்றைய மாணவர்கள் ஐஸ் கிரிம், மற்றும் குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர்.   இவற்றில் சேர்க்கப்படும் சேர்மங்கள் உடலுக்கு தீமை விளைவிக்க கூடியது.  எனவே இவற்றை தவிர்த்து தரமான தேயிலையை பயன்படுத்த வேண்டும் என்றார்.

கூடலூர் மருத்துவ அலுவலர் விவேக் பேசும்போது தேயிலையினை நன்கு கொதித்த நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து குடிக்கலாம்.  தேநீரை பால் சேர்க்காமல் குடிப்பதும்,  சர்க்கரைக்கு பதில்  தேன் அல்லது வெல்லம் கலந்து அருந்துவது அதிக பலனை தரும்.  தொடர்ந்து தேநீர் அருந்துவதால்  எடைகுறையும். கொழுப்பு சத்து குறையும் என்றார்.

நிகழ்ச்சியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த பட்டது.  கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராபெர்ட், பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி மேரி, பள்ளி தாளாளர் எலிசபெத், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுவீட்டி, கவிஞர் கந்தசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலாளர் மாணவி சங்கீதா வரவேற்றார்.  முடிவில் கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் பொன் கணேஷன் நன்றி கூறினார்.






தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கூடலூர் பாத்திமா  பெண்கள்  மேல்   நிலை பள்ளியில் தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு  நடைபெற்றது தென்னிந்திய தேயிலை வாரியம் குன்னூர், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில்   நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் உதவி மண் வள பாதுகாப்பு அலுவலருமான  சுந்தர லிங்கம் தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியை கூடலூர் குடிமை பொருள் தனி வட்டாச்சியர் முத்து  துவக்கி வைத்தார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்து பேசும்போது இந்தியாவில் 83 சதவீத மக்கள் தேநீரை குடிக்கின்றனர்.  இதில் நல்ல சுவை மிகுந்தது நீலகிரி தேயிலை.  இந்த பெயரை தக்க வைத்து கொள்ள கலப்பட தேயிலையை கண்டறிந்து களைவது  அவசியமாகிறது.  கலப்பட தேயிலை கண்டறிந்தால் மாணவர்கள் புகார்  தெரிவிக்க வேண்டும் என்றார்.

தேயிலை வாரிய உதவி இயக்குனர்  C .K  ரமேஷ் பேசும்போது   தேயிலை தற்போது வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வகையான தேயிலைகள் தயாரிக்க படுகின்றன.  தேநீர் அருந்துவதால்  உற்சாகம் கிடைகிறது, நரம்பு மண்டலம் சீரிய முறையில் செயல்படுகிறது, இதயத்தினை பலபடுத்துகிறது,  மாணவர்கள் அதிகம் தேநீர் அருத்துவதால் படிப்பில்  கவனம் செலுத்துவதோடு நினைவாற்றலும் பெருகும், எலும்புகளை ஊக்க படுத்துகிறது இதுபோன்று  பல்வேறு பயன்கள் நமக்கு கிடைக்கிறது.  அனைத்து வகையான தேநீரும் ஒரே மாதிரியான பயன்களை தருகிறது.  அனைவரும் தேநீரை அருந்தலாம் என்றார்.

தேயிலை வாரிய தொழிற்சாலை அலுவலர் சுனில்குமார் பேசும்போது இந்தியா, சீனா, இலங்கை, Uk, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தேயிலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.  தேயிலை சட்டத்தில்  தேயிலை துளில் கலப்படம் செய்வது தண்டனைக்குரியது என குறிப்பிடபட்டுள்ளது .  தேயிலையில் கலப்படம் இருப்பின் பச்சை தண்ணீரில் சாயம் வருவதன் மூலமும்,  வெள்ளை பேப்பரில் சாயம் படிவத்தை வைத்தும் கண்டறியலாம்.  மேலும் உள்ளங்கையில் தேயிலை துளை வைத்து கசக்கி பின்னர் முகரும் போது தேயிலையின் வாசனை வரும் இதனை வைத்தும் தரமான தேயிலையை அறியலாம்.  என்றார்.

உதவி மின் செயற் பொறியாளர் முரளிதரன் பேசும்போது  இன்றைய மாணவர்கள் ஐஸ் கிரிம், மற்றும் குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர்.   இவற்றில் சேர்க்கப்படும் சேர்மங்கள் உடலுக்கு தீமை விளைவிக்க கூடியது.  எனவே இவற்றை தவிர்த்து தரமான தேயிலையை பயன்படுத்த வேண்டும் என்றார்.

கூடலூர் மருத்துவ அலுவலர் விவேக் பேசும்போது தேயிலையினை நன்கு கொதித்த நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து குடிக்கலாம்.  தேநீரை பால் சேர்க்காமல் குடிப்பதும்,  சர்க்கரைக்கு பதில்  தேன் அல்லது வெல்லம் கலந்து அருந்துவது அதிக பலனை தரும்.  தொடர்ந்து தேநீர் அருந்துவதால்  எடைகுறையும். கொழுப்பு சத்து குறையும் என்றார்.

நிகழ்ச்சியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த பட்டது.  கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராபெர்ட், பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி மேரி, பள்ளி தாளாளர் எலிசபெத், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுவீட்டி, கவிஞர் கந்தசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலாளர் மாணவி சங்கீதா வரவேற்றார்.  முடிவில் கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் பொன் கணேஷன் நன்றி கூறினார்.