Wednesday, January 30, 2013

காந்தி நினைவு தினம் அனுசரிப்பு


காந்தி நினைவு தினம் அனுசரிப்பு


பந்தலூர், : பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை 
முன்னிட்டு காந்தி உருவபடத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. 

மது ஒழிப்பு குறித்து பொது மக்களுக்கு சேவை மையத்தினர் துண்டுபிரசுரங்களை வினியோகித்தனர். 

 இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

 மகாத்மா காந்தி பொது சேவை மையம் அமைப்பாளர் நவுசாத், பந்தலூர்- கூடலூர் நுகர்வோர் சங்க தலைவர் விஜயசிங்கம், தானிஸ்லாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment