Thursday, September 25, 2014

மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட சுவைமிகு ஆரோக்கிய பானம் தேநீர்

மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட

சுவைமிகு ஆரோக்கிய பானம் தேநீர்


நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்குப் பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது’   '83 சதவிகித இந்தியர் களின் வீடுகளில் தேநீர் நுகரப்படுகிறது. விரைவில் தேயிலை தேசிய பானம் என அறிவிக்க படும் என எதிர்பர்ர்க்கபடுகிறது.

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் முதன் முதலாகத் தேயிலையைப் பயிரிட்டவர் மணிராம் திவான். இவர், சுதந்திரப் போராட்ட வீரரும்கூட.

pls visit our webs 

தேயிலை ஒரு பசுமைத் தாவரம். இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப்படுகிறது.

வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வகையான தேயிலைகள் பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் அவை வேறுபடுகின்றன.

தேயிலையின் இரு சொற் பெயர் Camellia Sinensis என்பதாகும்.

இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழைமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை பிரசித்தி பெற்றவையாகும்.

தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யப் படுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.

தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர்.

தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள்...!

  
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் காபியை விடவும் குறைவாக 'காபினே' உள்ளது . எனவே கொழுப்பை பற்றி கவலைபட தேவையில்லை .
உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்தஅழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும்.


pls visit our webs 

தேயிலை (டீ-யின் ) மருத்துவ குணங்கள்

மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒரு கப் இஞ்சி டீ சாப்பிடுங்கள், கவலை காணாமல் போய்விடும்.   இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது.    நமக்கு துயரம், கவலை ஏற்படும் போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது. அதனால் தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள்
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது, இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது.   இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து, பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைக்கும்
ஜீரண சக்தி : நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
கேன்சர்: கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.
நீரிழிவு: கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது. அத்துடன் இது 'இன்சுலீனின்' செயல்பாட்டையும்' அதிகரிக்கிறது.
இதயம்: இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL, டிரைகிளிசரைடுகளின் அளவைக்  கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
ஆர்த்ரைட்டீஸ்: ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது.மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டு.
ஒபிஸிட்டி:  உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி,கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப்படுத்தவும் செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனும் குறைய வாய்ப்பிருக்கிறது.

pls visit our webs 
முதுமை: வயதாவதைத் தடுக்க முடியாது என்றாலும் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமை அடைவதை தடுக்கலாமே. உடல் திசுக்களில் உற்பத்தியாகும் 'ஃபிரீ ராடிகல்' எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப்படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி கூடுதலாகிறது.  
பல்: கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.  வாயில் உற்பத்தியாகக் கூடிய 'பாக்டீரியா'க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது.
அழகு:  கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது.
எடை குறைவு : க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல்எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது.
வாதத்திற்கும் நிவாரணி   : பல காலமாக பால் கலக்காத ப்ளாக் டீ, க்ரீன் டீ அல்லது வெள்ளை தேநீர்பருகுபவர்களுக்கு 60 சதவீதம் வாதம் (strokes) ஏற்படாது.
நரம்பியல் நோய்களைத் தடுக்கும்    பல நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் தேநீர் முக்கியபங்கு வகிக்கிறது
புரோஸ்டேட் புற்றுநோய்   இத்தாலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி, தினசரி மூன்று முறை க்ரீன்டீ பருகிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுத்துநிறுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்த ஆண்களே இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்  க்ரீன் டீ பருகினால் எலும்புகளின் கனிம அடர்வும், வலிமையும்அதிகரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  அடிக்கடி தேநீர் பருகி வரும் அதிக வயது பெண்மணிகளுக்கு இடுப்பெலும்புஅதிக அடர்வுடன் இருப்பதை போல், தேநீர் பருகாத இளம் வயதுபெண்மணிகளுக்கு இருப்பதில்லை.
மொத்தத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் பருகினால்,
படிக்கும் திறனும் ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.
பயன்படுத்தும் முறை:   
தரமான தேயிலைத் தூளை ஒரு கோப்பைக்கு இரண்டு டீஸ்பூன் வீதம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கோப்பை தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த தண்ணீரில் தேயிலைத் தூளைப் போட்டு மூடி வைத்து உடனே அடுப்பை அனைத்து விட வேண்டும். ஓரிரு நிமிடம் கழித்து அதை வடிகட்டி, தேவைக்கு சர்க்கரையும் பாலும் சேர்த்துக்கொள்ளவும்.  
கூடுமானவரை பால் சேர்க்காமலே  இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.   இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
டீ-யை நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.   80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.  விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள், எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.    ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.



தேயிலை கலப்படம்   இன்று கலப்படமில்லாத டீயை நீங்கள் கடைகளில் குடிக்கிறீர்கள் என்பதற்கு உத்திரவாதம் உண்டா? நிச்சயமாக இல்லை. மரத்தூள், ஏதாவது ஒரு இலைதூள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூள் , இவற்றுடன் செயற்கை சாயம்                      ( இது உணவிற்காகப் பயன்படுத்தப்படுவதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, உடைகளுக்காகப் பயன்படுத்தும் சாயமாககூட இருக்கலாம்) கலந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் சாய கலவையைதான் நீங்கள் சூடாக ஐந்து ரூபாய் கொடுத்து குடித்து மகிழ்கிறீர்கள்
தேயிலையில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
மேல இருக்குற ரெண்டு கிளாசுல, நமக்கு வலதுபுறம் இருப்பது நல்ல டீ. இடது புறம் இருப்பது கலப்படமான டீ. எப்படிக்கண்டுபிடிக்கலாம்?
pls visit our webs 
 ஒண்ணுமில்லை. டெஸ்ட் பண்ணனும்னு நினைக்குற தேயிலையை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கோங்க.  ஒரு கண்ணாடி டம்ளரில், சாதாரண தண்ணீரை ஊற்றிவிட்டு, அதில் அந்த தேயிலையைத் தூவுங்க. நல்ல தேயிலையாயிருந்தா, தேயிலையின் சாறு மட்டும் இறங்கி தண்ணீரின் நிறம் சிறிது மட்டுமே மாறும்.
கலர் சேர்த்த கலப்பட தேயிலையாயிருந்தா, தேயிலை தண்ணீரில் மூழ்கத் துவங்கும்போதே, கலர்கள் அந்த நீரில் வர்ண ஜாலமடிக்கும். கொஞ்ச நேரத்தில், அந்த டம்ளர் தண்ணீர் முழுவதுமே, இடது பக்க டம்ளரில் உள்ளதுபோல் கலராயிடும்.
தேயிலை துளை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும்.
வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.

தேயிலைத் தூளில் எப்படிக் என்ன கலப்படம் செய்கிறார்கள்?
இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் 'திக்’ காகவே இருக்குமாம்!
முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!
மஞ்சனத்தி இலை - குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!
புளியங்கொட்டை: புளியங்கொட்​டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!
மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.
மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல்,  நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை  போன்றவையும் கலக்க படுகிறது
ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
எது ஒரிஜினல்? தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று... இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.
உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேயிலையில் கலப்படம் செய்வதை தடுக்க தென்னிந்திய தேயிலை வாரியமும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவகமும் முயற்சிகள் எடுத்து வருகிறது.  நாமும் எச்சரிக்கையாக இருந்தால் அலுவலர்களுக்கு உதவியாக இருந்தால் தேயிலை கலப்படத்தினை தடுக்க முடியும்.
தேயிலையில் டீயில்  கலப்படம் இருப்பது தெரிந்தால்
தென் இந்திய தேயிலை வாரியம்,  பெட்போர்ட்,  குன்னூர்.
மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலர்,
அருகில் செயல்படும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள்
ஆகியோருக்கு தகவல் கொடுக்கலாம்.


pls visit our webs 

Saturday, September 13, 2014

குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா

குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா



குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.




தமிழ்நாடு அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பள்ளி நிர்வாகம் இணைந்து குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை செயல்படுத்தி வருகிறது.




இந்த மன்றத்தின் முன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் பள்ளியில் நடைபெற்றது.    
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளி தலைமை ஆசிரியர் பஜீத் குமார் பேசும்போது மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் வருங்காலத்தில் சமூக மாற்றத்தினை உருவாக்க முடியும் குறிப்பாக ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை தற்போது பெரிதாகாமல் தடுக்க பட்டுள்ளதாக ஆய்வில் கண்டு பிடிக்க பட்டுள்ளது இதுபோன்று நுகர்வோர் விழிப்புணர்வினை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும் என்றார்.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு.சிவசுப்பிரமணியம் பேசும்போது நமது தேவையை விட அதிகமான பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம்.  பல பொருட்கள் ஆடம்பரத்திற்க்காகவும், அடுத்தவர் பயன் படுத்துகிறார் என்பதற்காகவும், விளம்பரத்தில் சொல்லபட்டதற்க்கவும் பயன் படுத்து கிறோம் இதனால் தேவையற்ற செலவினங்களை உருவாக்கு கிறது.  மாணவர்களிடையே உணவு முறைகள் மாறி வருகிறது.  இதனால் உடலில் ஊட்ட சத்து குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.  ஊட்ட சத்து பானங்கள் வெறும் விளம்பரமே,  அவற்றை தவிர்த்து வழக்கமான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் பொன். கணேஷன் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினார்.  








நுகர்வோர் மைய பந்தலூர் வட்டார அமைப்பாளர் தனிஸ்லாஸ் சுகாதார வாழ்வு குறித்து பேசினார்.  











நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியை அன்சி வரவேற்றார்.  முடிவில் அலுவலக உதவியாளர் கங்காதரன் நன்றி கூறினார்.































pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/


பறவைகளின் பொருள் பொதிந்த பேச்சரவம் கேட்டிடுவோம்

சிட்டுக் குருவிகள் நம் கண்ணில் இப்போதெல்லாம் தட்டுப்படாததால் அவற்றின் இனமே அழிந்துவிட்டதாக அங்கலாய்க்கிறோம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் நகரமயமாதலின் விளைவாகத் தங்களுக்கு ஏற்ற வாழ்விடங்களைத் தேடி அவை இடம் பெயர்ந்துவிட்டன என்பதே உண்மை.
குயில் மட்டுமல்ல, எத்தனையோ பறவைகள் நம் கண்ணில் படாமல் மரங்களில் தம்மை மறைத்துக் கொண்டு கூவுகின்றன. இவற்றை எல்லாம் நாம் காது கொடுத்து கேட்பது கிடையாது.
ஏதாவது ஒரு பறவையின் கூவல் கேட்காமல் நின்றுவிட்டால், அந்தப் பறவை எங்கே போயிருக்கும் என்ற அக்கறை நம்மிடம் இல்லை.
ஒரு பறவையின் கத்தல் அல்லது கூவல் மிகுந்த மன ஆறுதலைத் தரக்கூடியது. மனத்தில் பல்வேறு விதமான உணர்வு அலைகளை எழுப்ப வல்லது.
வால்மீகியின் கதைதான் நாம் அறிந்த ஒன்றாயிற்றே! வேடன் வால்மீகியின் அம்பு பட்டு வீழ்ந்த இணைப் பறவையின் பிரிவை ஆற்றமாட்டாது ஏக்கக் குரல் எழுப்பிய கிரெüஞ்சப் பட்சியின் கூவல், வால்மீகியைக் மகாகவியாக்கி ராமாயண காவியத்தையே சிருஷ்டிக்க வைத்து விடவில்லையா?
இந்த வகையில் கிராமத்தில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அதிகாலை வேளையில் தோப்புகளில் கேட்கும் பல்வேறு புள்ளினங்களின் ஆரவாரத்துடன் பொழுது புலரும். ஒருநாளின் பல்வேறு பொழுதுகளில் வித விதமானப் பறவைகள் ஒலி எழுப்புவதைக் கேட்க முடியும்.
பறவைகளின் கூவலை வைத்தே அவற்றை அடையாளம் கண்டு பெயர் சொல்லும் வழக்கம் இன்றும் கிராமவாசிகளிடம் உண்டு. தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவர் பறவைகளின் ஒலிகள் குறித்து தெரிவித்த தகவல்கள் சுவாரஸ்யமானவை:
மூன்றாம் ஜாமத்தில்தான் கீச்சாங்குருவி கத்தும். அது விடிவதற்கு வெகுநேரம் முன்னதாகவே விவசாயிகளை எழுப்பிவிட்டு விடும். ஒவ்வொரு ஜாமத்துக்கும் கத்துகிற பறவையின் பெயர் சாமக் கோழி.
ஏதாவது வேலையாக வெளியே போகும்போது, கருவாட்டுவால் குருவி என்கிற வலியன் குருவி கத்திக் கொண்டே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக குறுக்காகப் பறந்து போனால், போகிற காரியம் பலிக்கும். இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக கத்திக் கொண்டு பறந்தால், சகுனம் சரியில்லை.
மழைக் காலங்களில் கானாங்கோழிகள் சத்தம் அதிகமாகக் கேட்கும். கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளை நாடிச் செல்லும் கானாங்கோழிகளை "பறக்கத் தெரியாத பறவை' என்றுதான் சொல்ல வேண்டும். அக்காக் குருவி கத்தினால் ஆற்றில் தண்ணீர் வரும்.
ஊமைக்கோட்டான் என்று ஒரு பறவை இருக்கிறது. நாம் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும்போது, நமக்கு முன்னால் சாலையில் வந்து நிற்கும். விழிகளை உருட்டி கர்ண கடூரமாக குரல் எழுப்பும். நீங்கள் அதைக் கடந்து சென்றுவிட்டால், நீங்கள் செல்லும் பாதையின் முன்னால் மீண்டும் போய் நின்று கொண்டு பயமுறுத்தும். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இப்படிச் செய்துவிட்டு பின்பு தானே பறந்து போய்விடும்.
அரிக்குருவிகள் சத்தம் கேட்டால், விளைந்து நிற்கும் நெற்கதிர்களுக்கு ஆபத்து. அறுவடைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வரும் அவை தானியங்களை கொத்திக் கொத்தித் தின்றுவிடும்.
பறவை இயல் ஆராய்ச்சியாளர் ஒருவர், பறவைகள் எழுப்பும் ஒலிகள் குறித்த சில தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.
"அன்றில் பறவை இரவு நேரங்களில் கரையும். "க்ரியூ.. க்ரியூ என்று அவை கத்தினால் கட்டாயம் மழை வரும். உடனே ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அவற்றை மேய்ச்சலில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். உடல் கருநீலமாக இருக்கும். தலைமட்டும் சிவப்பு நிறத்தில் இருக்கும். அன்றிலில் ஒன்று இறந்துவிட்டால் மற்றொன்றும் இறந்துவிடும்.
வயல்வெளிகளில் காவல் காப்பவர்களை டிட்டிடியூ... டிட்டிடியூ என்று கத்தி ஒரு பறவை எச்சரிக்கும். யாரோ ஒரு ஆள் வந்து கொண்டிருக்கிறார் என்று இதற்கு அர்த்தம். இந்தப் பறவையின் பெயரே "ஆள்காட்டிப் பறவை'தான்!
கூழைக்கடா என்று ஒரு பறவை இருக்கிறது. இதை "செங்கால் நாரை' என்றும் சொல்வது உண்டு. சத்திமுற்றத்துப் புலவர் "நாராய் நாராய் செங்கால் நாராய்' என்று பாடியது இந்தப் பறவையைப் பார்த்துதான். இது மனிதர்களின் குரலை அப்படியே "மிமிக்ரி' செய்யும். கூழைக்கடா முழு வளர்ச்சி அடைந்தவுடன் அதன் குரலை இழந்துவிடும். இணையை அழைப்பதற்குக்கூட தன் அலகுகளை ஒன்றோடு ஒன்று மோதி ஒலி உண்டாக்கத்தான் இதனால் முடியும்!
அசுணம் என்பது இசையறிந்த பறவை. அபசுரத்தைக் கேட்டால் இது இறந்துவிடும் என்று சங்கப்பாடல்கள் கூறுகின்றன.
மணிக்கொடி எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி "மகா கவிகள்' என்ற தலைப்பில், பறவைகளைப் பற்றி ஒரு காவியமே எழுதியிருக்கிறார். அவருடைய கவிதைத் தொகுப்பின் பெயர்கூட "காட்டு வாத்து' தான்.
எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் பிச்சமூர்த்தியை சந்திக்க ஒரு மழை நாளில் சாலியமங்கலம் கிராமத்துக்கு சென்றபோது, நீண்ட வெண்ணிறத்தாடி காற்றில் அலை பாய மழையில் நனைந்தபடி தண்ணீர்ப் பரப்பை ரசித்துக் கொண்டு நின்றிருந்தார் ந. பிச்சமூர்த்தி.
"இது ஒரு அபூர்வமான பறவை. இதோட பேரு முக்குளித்தான். இது தண்ணிக்குள்ள மீன் மாதிரி நீந்தி வாழும். அதே நேரத்துல தண்ணிக்குள்ளே இருந்து மழை பெய்யற நேரத்துல வெளியே வந்து ஆகாய வானத்துல பறக்கும் பாருங்க... அற்புதமான சிருஷ்டி. தண்ணீர் கலங்கினால் இதுக்குப் பிடிக்காது. தண்ணீர் அடிமட்டத்துலே இருந்து நீந்தி வந்து மரத்துமேல போய் உட்காந்துக்கும். வானத்துலயும் பறக்கும். குக்கூ குக்கூன்னு அதுக்குள்ள சத்தம் பாருங்க..' என்று வியந்தார் பிச்சமூர்த்தி.
இந்தப் பறவைக்கு முக்குளித்தான் என்று பெயரிட்ட கிராமவாசியைவிட மிகச் சிறந்த கவிஞன் வேறு யார் இந்த உலகில் இருக்க முடியும்?
சிட்டுக்குருவிகளின் கீச்சொலிகள் கேட்காத வீட்டுத் தாழ்வாரங்களை கிராமத்தில் பார்க்கவே முடியாது. காக்கையின் கரகரப்பான குரலை யாரும் வெறுத்துவிடக் கூடாது என்பதற்காகவே காக்கை கரைவதை விருந்தினர் வருகையின் முன்னறிவிப்பாக சொல்லி வைத்தனர் போலும்.
ஒரு முனிவர் தாம் பெற்ற சாபத்தின் காரணமாக காக்கையாக மாறிவிடுகிறார். அவர்தான் காகபுசுண்டர். காக்கைதான் ராமாயணக் கதையை கருடனுக்குச் சொன்னதாக நமது புராணங்கள் கூறுகின்றன.
"காவென்று கத்திடுங் காக்கை என்றன் கண்ணுக்கினிய கருநிறக் காக்கை' என்றும் "பின்னர் தெருவிலோர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும்' எனவும் சிட்டுக் குருவியின் கீச்சொலியை "குருவித் தமிழ்' என்றும் ஒலிகளை பலபட ரசித்து பாடல்கள் புனைந்தான் பாரதி. பாரதியின் "காளிகோயில்' என்ற வசன கவிதையில் பல்வேறு பறவைகளின் குரல்களை வர்ணிப்பதைப் பாருங்கள்!
கிளி : தைர்யா, தைர்யா, தைர்யா
குயில்கள் : சபாஷ்! சபாஷ்! சபாஷ்!
குருவிகள் : டிர்ர்ர்... டிர்ர்ர்ர்
நாகணவாய் : குபுக்... ஜீவஜீவ ஜீவஜீவ
முருகன் : சிவசிவ.. சிவசிவ... சிவசிவா...
காக்கை : எங்கோ வாழ்! எங்கோ வாழ்!
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் "பரத்வாஜம்' என்ற குருவியின் சம்ஸ்கிருதப் பெயரை "கரிச்சான்' என்ற தமிழ்ப் பெயராக மாற்றி அந்தப் புனைபெயரில் கதைகள் எழுதியதும், அவருடைய சீடரான நாராயணசாமி கு.ப.ரா மீதுள்ள மதிப்பால் "கரிச்சான்குஞ்சு' என்ற பெயரில் எழுதிப் புகழ்பெற்றதும் இலக்கிய உலகம் அறிந்த செய்தி.
எழுத்தாளர் ஸ்வாமிநாத ஆத்ரேயன், கு.ப.ரா. மேலும் சில நண்பர்களுடன் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, கரிச்சான் எங்கோ கத்துவதைக் கேட்டு பேச்சை நிறுத்தி "அதன் பெயர்தான் பரத்வாஜம்' என்று சொல்லிவிட்டு உரையாடலைத் தொடர்ந்தாராம்!
சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் அழைத்துக் கொண்டு மதுரையை நோக்கி அடர்ந்த கானகத்தின் வழியே செல்லும்போது, இரவு, பகல் தெரியாமல் இருட்டாக இருக்கிறது. பறவைகளின் குரல் ஒலிகளை வைத்து இது அதிகாலை, நண்பகல், மாலை, இரவு, நள்ளிரவு என்று சொல்லிக் கொண்டு வருவதாகப் பாடல் வரிகள் வருகின்றன.
ஆண்டாள் பாடிய திருப்பாவையில் "கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?' என்று தோழிகளை எழுப்புவாள். ஆனைச்சாத்தன் என்கிற குருவிக் கூட்டத்தின் கீச் சொலிகளைக் கேளாமல் அப்படி என்ன ஆழ்ந்த உறக்கம்?
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் பொருளற்றப் புலம்பல்களைக் கேட்டதெல்லாம் போதும். வாருங்கள், பறவைகளின் பொருள் பொதிந்த பேச்சரவம் கேட்டிடுவோம்

பழமைகள் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல, பாதுகாக்கப்பட வேண்டியவை!

அண்மையில் நண்பர் ஒருவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருடைய ஆறு மாத குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருப்பதாக கூறி, அவசரமாக மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார். சில மணி நேரத்துக்குப் பிறகு அவரிடம் குழந்தையின் நலம் குறித்து விசாரித்தபோது, குழந்தையைப் பார்க்க வந்திருந்த உறவினர்கள் தூக்கியபோது நரம்பு பிசகியதால் அழுததாகவும், தற்போது சரியாகி விட்டதாகவும் கூறினார்.
ஆனால், அவர் அடுத்து கூறியதுதான் அதிர்ச்சியை உண்டாக்கியது. மருத்துவமனையில் இதற்கென குழந்தைக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை, மருந்து என சில நூறு ரூபாய்கள் செலவு ஆனதாகவும் கூறினார்.
குழந்தைக்கு சிறு வலி என்றாலும் தனது அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். இரவு நேரம் என்றால் பெற்றோரின் தூக்கம் பறிபோகும்.
அதேநேரம் வயதானவர்கள் குழந்தையின் நிலை அறிந்து குடல் தட்டுதல் எனப்படும் கை வைத்தியம் செய்வார்கள். அத்துடன் மேலும் கீழும் வேகமாக உலுக்குவார்கள். துணியில் குழந்தையை படுக்க வைத்து இருபக்கமும் ஆட்டுவார்கள்.
இதைப் பார்க்கின்றவர்களுக்கு உள்ளம் பதைபதைக்கும். ஆனால், சில நிமிடங்களில் குழந்தையின் அழுகுரல் மெல்லக் குறைந்து நிம்மதியாக உறங்கும். பாட்டி வைத்திய முறைகளில் இதுவும் ஒன்று.
ஆனால், தற்போது பாட்டி வைத்தியங்கள் மெல்ல மறைந்து வருகின்றன. சிறு தலைவலி என்றாலும் கஷாயத்தின் மூலம் குணமான காலங்கள் மறைந்து போய்விட்டன. கிராமங்களில் எளிதில் கிடைக்கும் கீழாநெல்லி, தும்பை, தூதுவளை, கரிசலாங்கண்ணி உள்ளிட்ட செடிகள் மருத்துவ குணம் நிறைந்தவை.
உடல்நிலை சரியில்லை என்றால், அந்தப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் இந்த செடிகளில் நோய்க்கு தக்கவாறு கஷாயமாக தயாரித்து சாப்பிடக் கொடுத்து ஓய்வு எடுக்கச் சொல்வார்கள்.
மஞ்சள் காமாலை, சுளுக்கு போன்றவற்றுக்கு மருத்துவரிடம் செல்லும்போது, நாட்டு வைத்தியத்தை பரிந்துரைக்கும் சில மருத்துவர்களும் இருக்கிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் கிராமங்களில் இருந்து நகரப்பகுதிகளில் இடம் பெயர்ந்த குடும்பங்கள், தங்களது பெற்றோரை கிராமங்களிலேயே விட்டுவிடுகின்றனர்.
இதுபோன்ற அவசர காலங்களில் தங்களது அலைபேசி வாயிலாக முதலுதவி முறைகளைக் கேட்டு அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அது கைகளால் செய்யப்படும் முதலுதவி போல ஆகாது. ஏனெனில், கிராமங்களில் கிடைக்கும் மூலிகைச் செடிகள் நகரங்களில் கிடைக்காது.
அத்துடன் குழந்தையைப் பாசத்துடன் பார்த்துக் கொள்ள பெற்றோருக்கு நேரமும் இருப்பதில்லை. இதனால், உடல் உபாதைகளுக்கு ஆங்கில மருந்துகளைத் தேடி ஓட வேண்டியுள்ளது.
தற்போது அறிவியல் உலகத்தில் அவசர கதியில் மருந்துக் கடைகளில் நமது உடல் உபாதையை கூறி மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீங்கானது என்று பலமுறை மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நமது நோய்க்கு தகுந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி சாப்பிடுவதால் உடனடியாக பாதிப்பு ஏற்படாது என்றாலும், நம்முடைய வாழ்நாள் எண்ணிக்கையை குறைப்பதில் அது பெரும்பங்கு வகிக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆனால், நம்மில் பலருடைய காதுகளில் இன்னமும் விழுந்தபாடில்லை.
இயற்கையிலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறோம். இயற்கை வைத்தியம், இயற்கை விவசாயம், இயற்கை உணவு முறை இவையெல்லாம் மறைந்து வருகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவச்சியால் கிராமங்களில் பிரசவங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. தற்போது அவை காலாவதி ஆகிவிட்டன. மருத்துவச்சிகள் மறைந்து வருகின்றனர்.
அவர்களின் மருத்துவ முறைகளை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்து செல்ல யாரும் முன்வராததாலும், உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடப்பதாலும் ஆங்கில மருத்துவ முறைகளை நாட வேண்டியுள்ளது.
ஆக இணையத்தில் மட்டுமே காணக்கூடிய நிலையில் இனி பாட்டி வைத்தியமும், வீட்டு வைத்தியமும் இருக்கும்.
அனுமன் கொண்டு சென்ற சஞ்சீவினி மூலிகைகள் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது போல கண்டறியப்படும் நிலை கிராமத்து மூலிகை செடிகளுக்கும், பாட்டி வைத்திய முறைகளுக்கும் வரக்கூடாது.
பழமைகள் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல, பாதுகாக்கப்பட வேண்டியவை!

Tuesday, August 26, 2014

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ,

நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா??
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.      
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.
வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்      "Pizza Hut, Dominos,    KFC, McDonalds,   Pizza Corner,    Papa John’s Pizza,
California Pizza Kitchen,    Sal’s Pizza"   இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.    ● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது      E 422 – ஆல்கஹால்   E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்  
E 471 – எருது & ஆல்கஹால்   E 476 – ஆல்கஹால்    E 481 – எருது & கோழி   
E 627 – ஆபத்தான கெமிக்கல்  E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி  
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!  இயற்கையாய் இயற்கையோடு வாழ..!    இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!  ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!  மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
நன்றி கடலூர் அரங்கநாதன்...

எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு


எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு



எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

மஞ்சூர் அருகே எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு  கருத்தரங்கினை நடத்தின.   நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்து பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு முலம் தரமற்ற பொருட்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்றார்.

தமிழ்நாடு  புதுசேரி நுகர்வோர்  அமைப்புகளின்  கூட்டமைப்பு (பெட்காட்) மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  நுகர்வோர்கள் சார்பான விழிப்புணர்வு மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.  இவற்றுக்கு பள்ளி நிர்வாகங்கள் குடிமக்கள் நுகர்வோர்  மன்றங்கள்   நாட்டு நலப்பணி திட்டங்கள் முக்கிய  பங்கு ஆற்றுகின்றன.   நாம் பயன் படுத்தும் பொருட்கள்  நமக்கு  பயன்  தருகிறதா என்பதையும்  பொருளின் தன்மையும்  அறிந்து பயன் படுத்த வேண்டும்.  விளம்பரங்கள் உண்மையா என பிரித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நுகர்வோர் மாவட்ட கூட்டமைப்பு பொதுசெயலாளர் வீரபாண்டியன் பேசும்போது  நுகர்வோருக்கு மிக பெரிய ஆயுதம் பில் எனவே அனைவரும் பில் வாங்க பழகி கொள்ள வேண்டும் என்றார்.   தற்போது புகார்கள் எளிய முறைகளில் பதிவு செய்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன இவற்றை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர் சிவராஜ் சிவபுத்ரா முன்னிலை வகித்தார்.  மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மணிகண்டன் வரவேற்றார்.முடிவில் பட்டதாரி ஆசிரியர் பழனிசாமி நன்றி .கூறினார்.


Monday, August 25, 2014

The Voluntary consumer organizations applying for the awards must fulfill the following conditions:-
i)             It should be a registered voluntary consumer organization working whole time purely for the promotion and protection of consumer interests;

ii)            The applicant Voluntary Consumer Organization must have at least 100 members;

iii)          It should have been actively and continuously engaged for the cause of consumer protection for at least during the last 5 years;

iv)          It should be non-political, non-official and under non-proprietary management and not an outfit of any Industry or Business Houses or promoted by them;

v)            It should not be run for profit for any individual or group of individuals but should serve the general public without distinction of caste, creed, color and religion;

vi)          It should not have received any prize/award for the same work from any other Department/Ministry of the Central Government for the same period;

vii)         It should not have been involved in any financial or managerial irregularities of any kind or any court cases pending against them for such reasons;

viii)        It should have documentary evidence relating to consumer welafre activities which resulted in visible impacts on the ground;

ix)          The managerial staff should have thorough knowledge of subject of consumer protection and up to date information on latest consumer issues.

Sunday, July 27, 2014

சேரம்பாடி அரசு உயர் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்


சேரம்பாடி அரசு உயர் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு உயர் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பந்தலூர் கூடலூர் நுகர்வோர் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தங்கினார். சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன், சேரம்பாடி கல்வி வளர்ச்சி குழு செயலாளர் யோகராஜ், நிர்வாகி பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மகாவிஷ்ணு முகாமினை துவக்கி வைத்தார்.  ஊட்டி அரசு கண் மருத்துவர்  அகல்யா  தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதணை சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் 100க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர். 10 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டு   கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில் கண் பரிசோதகர் கலாவதி, ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்க்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ், சந்திரன், காதர்  உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.  முன்னதாக பந்தலூர் கூடலூர் வட்டார நுகர்வோர் சங்க  தலைவர் விஜயசிங்கம் வரவேற்றார்.  முடிவில் நுகர்வோர் மைய நிர்வாகி முஸ்தபா நன்றி கூறினார்.









Saturday, June 28, 2014

consumer information protection centers

http://ncdrc.nic.in/images/logo4.gif

http://www.consumercourt.in/

http://www.core.nic.in/

http://www.cccindia.co/

http://www.corecentre.org/

http://www.consumersforum.info/

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

Sunday, June 22, 2014

மேங்கோரேஞ்சு மருத்துவ மனையில் இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் அருகே மேங்கோரேஞ்சு மருத்துவ மனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிடப்பிள் டிரஸ்ட்,மேங்கோரேஞ்சு மருத்துவமனை மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை தங்கினார். நுகர்வோர் மைய செயலாளர் பொன் கணேசன் நிர்வாகி தனிஸ்லாஸ் மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத்  ஷாலோம் சேரிடப்பிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணிஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

ஊட்டி அரசு கண் மருத்துவர்  அகல்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  5 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டது.  அவர்கள் விருப்பத்துடன் கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  
முகாமில் கண் பரிசோதகர் கலாவதி, ஸ்ரீதர், மேங்கோரேஞ்சு எஸ்டேட்  ரிச்மௌண்ட்  மருந்தாளுனர் செல்வகுமார்   உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
S.SIVASUBRAMANIAM, President

நுகர்வோர் விழிப்புணர்வு தெரு பிரச்சாரம்

உதகை கந்தல் பெனடிக் பகுதியில் நுகர்வோர் விழிப்புணர்வு தெரு பிரச்சாரம் மேற்கொள்ள பட்டது.  தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கள் நுகர்வோர் பாதுகப்பு துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தெரு முனை பிரச்சரம் மேற்கொள்ள பட்டது உதகை தனி வட்டாச்சியர் பால்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு அலுவலர் நல்ல சாமி தலைமை தங்கினார்  மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்  முன்னிலை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.   

உதகை பெத்தலகேம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர் தெரு நாடகம் மூலம் மக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் 

நிகழ்ச்சியில்  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் புளுமௌண்டன் நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் ராஜன் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் செயலர் சபாபதி உதகை நுகர்வோர் பதுகப்பு சங்க செயலாளர் தருமலிங்கம்  பெத்தலகேம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரியர் குணசீலி ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் உதகை வட்ட வழங்கள் அலுவலர் பால்ராஜ் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

நுகர்வோர் விழிப்புணர்வு தெரு முனை பிரச்சரம்

உதகை கந்தல் பெனடிக் பகுதியில் நுகர்வோர் விழிப்புணர்வு தெரு பிரச்சாரம் மேற்கொள்ள பட்டது.  தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கள் நுகர்வோர் பாதுகப்பு துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தெரு முனை பிரச்சரம் மேற்கொள்ள பட்டது உதகை தனி வட்டாச்சியர் பால்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு அலுவலர் நல்ல சாமி தலைமை தங்கினார்  மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்  முன்னிலை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.   

உதகை பெத்தலகேம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர் தெரு நாடகம் மூலம் மக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் 

நிகழ்ச்சியில்  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் புளுமௌண்டன் நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் ராஜன் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் செயலர் சபாபதி உதகை நுகர்வோர் பதுகப்பு சங்க செயலாளர் தருமலிங்கம்  பெத்தலகேம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரியர் குணசீலி ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் உதகை வட்ட வழங்கள் அலுவலர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Saturday, June 14, 2014

நித்தம் உயிர்காக்கும் ரத்தம்: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்

நித்தம் உயிர்காக்கும் ரத்தம்: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்

ரத்ததானம் அளிப்பதன் மூலம், யாரோ ஒருவருடைய உயிர் காப்பற்றப்படுகிறது. மற்றொருவர் ரத்த தானம் செய்வதற்கும் வழிகாட்டியாக அமைகிறது. இன்று நீங்கள் ரத்த தானம் செய்தால், அது நாளை உங்களுக்கு கூட பயன்படலாம். பாதுகாப்பாக ரத்ததானம் செய்வது பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 14ம் தேதி, உலக ரத்ததானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "தாய்மார்களை காப்பற்ற, பாதுகாப்பாக ரத்தம் அளித்தல்' இந்த ஆண்டு இத்தினத்தின் மையக்கருத்தாக உள்ளது.


ரத்தம் அளிக்கும் முறை:

நல்ல உடல்நலத்துடன், எடை 45 கிலோவுக்கு மேல் உள்ள, 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின், ரத்ததானம் செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.50 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது, 350 மி.லி., ரத்தம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. 2 நாட்களில் இழந்த ரத்தத்தை உடல் மீட்டு விடுகிறது. 2 மாதங்களில், சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்து விடுகிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கலாம்.


ரத்தம் அளிப்பதால் ஏற்படும் நன்மை:

ரத்தம் வழங்குவதால், மற்றவர் பயன்பெற்றாலும், தானம் செய்பவர்களுக்கும் இது பலன் அளிக்கிறது. புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதை கருதலாம். ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள ரத்ததானம் செய்வது உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு, தானம் செய்யும் போது சீரடைகிறது. ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து, தேவைப்படுபவர்களுக்கு ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளட்கள் என பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை, ஒருவரால் காப்பாற்ற முடிகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருக்கு ஏதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் தானாக முன்வந்து தானம் செய்தால் மட்டுமே, தேவைப்படும் ரத்தத்தை பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.


S.SIVASUBRAMANIAM, President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
94 88 520 800-94 898 60 250,   944 29 740 75,  948 639 34 06